ஜி.ராமகிருஷ்ணன் ஒப்பீடு
சென்னை, டிச. 24- ஹிட்லர் ஆட்சியில் கோய ரிங், கோயபல்ஸ் போல இந்தி யாவில் மோடியும் அமித்ஷாவும் உள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறி யுள்ளார். தந்தை பெரியாரின் 46வது ஆண்டு நினைவு தினம் செவ்வா யன்று (டிச.24) அனுசரிக்கப் பட்டது. இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி., மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது செய்தியாளர்களி டம் ஜி.ராமகிருஷ்ணன் கூறிய தாவது:
சாதி, மத பேதமற்ற சமதர்ம சமுதாயம் அமைய தந்தை பெரி யார் கனவு கண்டார். அதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித் தார். அரசியல் சட்டம் மதச்சார் பற்றது என்பதை அம்பேத்கர் உறுதிப்படுத்தினார். அரசியல் சட்டம் சிறப்பாக இருந்தாலும், அதிகாரத்திற்கு யார் வருகி றார்கள் என்பதை பொறுத்தே அதன் அமலாக்கம் இருக்கும் என்று அம்பேத்கர் எச்சரித்தி ருந்தார்.
மத்தியில் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பாஜக, அரசியல் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை எனும் தூண்களை ஒவ்வொன்றாக சாய்த்துக் கொண்டு இருக்கி றது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை தொடர்ந்து தேசிய குடியுரிமை பதிவேட்டிற் கான பணிகளை தொடங்கி யுள்ளது. மக்களை மத ரீதி யாக பிளவுபடுத்தி, சிறுபான்மை மக்களை இரண்டாந் தர மக்க ளாக மாற்ற முயற்சிக்கிறது. அதற்காக அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதே தாக்குதலை தொடுத்துள்ளது. பெரியார் கண்ட கனவை நிறைவேற்ற, மதச்சார்பற்ற, சாதி, பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவது தான் பெரியாருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி. இவ்வாறு அவர் கூறினார்.
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ராமகிருஷ்ணன், “இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை குலைப்பதற்கு பாஜக முயற்சித்து வருகிறது. அதற்கெதிராக மகாராஷ்டிரா விலும், ஜார்க்கண்டிலும் மக்கள் வாக்களித்துள்ளனர்” என்றார். குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி தோல்விய டைந்துள்ளதாக அதிமுக நாளேடு விமர்சித்துள்ளது பற்றி கேட்டதற்கு, “மதச்சார் பின்மையை பாதுகாக்க நடைபெற்ற அந்த பேரணி காவல்துறை அனுமதி மறுத்த போதும் வெற்றிகரமாக பேரணி நடந்தது. அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பொறாமை யுள்ளவர்கள்தான் குறை கூறு கிறார்கள்” என்றார். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்புவதாக பிரதமர் குற்றம்சாட்டியிருப்பது குறித்த மற்றொரு கேள்விக்கு,“ஹிட்லர் ஆட்சியில் கோயரிங்கும், கோய பல்சும் பொய் சொன்னது போல மோடியும் அமித்ஷாவும் பொய் சொல்கிறார்கள். குடியுரிமை திருத்தச்சட்டத்தில் உள்ள ஜன நாயக விரோத, மதச்சார்பின் மையை சீர்குலைக்கும் தன்மை களை புரிந்து கொண்டுதான் மக்கள் போராடுகிறார்கள். அந்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.