tamilnadu

img

கொரோனா பரவல் 154 கோடி மாணவர்கள் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பரவி வருவதால் 154 கோடி மாணவர் களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கை யில், “உலகம் முழுவதும் கொரோனா பரவி வருவதால் 154 கோடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண் குழந் தைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட் டுள்ளனர். இது இடை நிற்றலுக்கு வழி வகுக் கும். பாலின இடைவெளியையும் அதிகரிக் கும். பெண்களை பாலியல் ரீதியா சுரண்டும் அபாயத்திற்கும் வழிவகுக்கும். இளம் வய திலேயே கட்டாய திருமணம் என்ற நிலைக்கு இட்டுச் செல்லும்” என்று குறிப்பிட்டுள்ளது. 

இது குறித்து யுனெஸ்கோவின் உதவி இயக்குநர் ஜெனரல் ஸ்டெபனியா கியானினி கூறுகையில், “கொரேனா தொற்று பரவல் கார ணமாக உலகெங்கும் பள்ளிகள் மூடப்பட் டுள்ளன. இதனால் 89 சதவீத மாணவ -மாணவி கள் பள்ளிக்குச் செல்லமுடியாமல் உள்ளனர். இந்த சதவீதம் பள்ளி-கல்லூரிகளுக்குச் செல் லும் 154 கோடி மாணவர்களை பிரதி நிதித்துவப்படுத்துவதாகும். இதில் 74 கோடிப் பேர் மாணவிகள். இவர்களில் 11 கோடி பெண் குழந்தைகள் குறைவான வளர்ச்சி அடைந்த நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நாடு களில் கல்வி பெறுவதே மிகப்பெரிய போராட்ட மாக உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் பெண் குழந்தைகள் பலர் பள்ளிக்கு மீண்டும் வருவார்கள். பலர் வரமாட்டார்கள். இந்த நிலை நீடித்தால் கல்விக்கு பெரும் அச்சுறுத் தல் ஏற்படும்” என்றார்.