tamilnadu

img

அனைத்துக் கட்சிகளை கூட்டுவது அரசியலாம்

முதலமைச்சர் சொல்கிறார்

சென்னை, மார்ச் 30- தமிழகத்திலும் மேலும்  17 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டி ருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, உயர் அதிகாரிக ளுடன் ஆலோசித்த பின் முதல்வர் எடப்பாடி பழனி சாமி பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிக ரித்துள்ளது. வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக  17 பேருக்கு தொற்று உறுதி யாகியுள்ளது. தமிழகத்தில்  ஒருவர் மட்டும்தான் இது வரை கொரோனா தொற் றுக்கு உயிரிழந்துள்ளார். கொரோனா தடுப்பு நட வடிக்கைக்காக தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய் யப்பட்டவர்களில் 5 பேர் குண மடைந்து டிஸ்சார்ஜ் ஆகி யுள்ளனர். 25 லட்சம் என்- 95  முகக் கவசங்கள் வாங்கவும்   உத்தரவிடப் பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு முடி வுகள் இன்னும் வரவேண்டி யுள்ளது. 1.5 கோடி முகச்கவ சங்கள் வாங்குவதற்கு தமி ழக அரசு ஆர்டர் செய் துள்ளது.

வீட்டு வாடகைதாரர்க ளின் பிரச்சினை பரிசீலிக்கப் படும். கொரோனாவுக்கு ஒரே தடுப்பு மருந்து மக்கள் தங்களே தனிமைப்படுத்தக் கொள்வதுதான். கொரோனா  அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதனை நடத்  தப்படும். பிற மாநிலங்களை விட தமிழகத்தில் பொது மக்களின் ஒத்துழைப்பு நன்றாகவே உள்ளது. கொரோனா பரவலில்  தமிழகம் 2வது கட்டத்தி லிருந்து 3வது கட்டத்துக்கு செல்லாமல் தடுக்கும் பணி யில் தீவிரம் காட்டப்பட்டுள்  ளது. கொரோனா விஷ யத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அரசியல் செய்வது என்பது தேவை யற்றது.  இவ்வாறு அவர் கூறி னார்.