சென்னை,அக்.30- சிறுவன் சுஜித் உயிரிழந்தது குறித்து எனது ஆதங்கத்தை வெளிப் படுத்தினேன். எனது ஆதங்கத்தை முதல்வரால் புரிந்துகொள்ள முடிய வில்லை என்று மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்க 5 நாட்க ளாக மீட்புக் குழுவினர் மேற் கொண்ட பல்வேறு முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. சடலமாக மீட்கப்பட்ட சுஜித் உடல், பிரேத பரி சோதனைக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது. சுஜித்தின் பெற் றோர் மற்றும் உறவினர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் மற்றும் அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், சுஜித் மீட்புப்பணி குறித்து அரசை ஸ்டா லின் குறை கூறுவது முற்றிலும் தவ றான குற்றச்சாட்டு என்றார். இந்நிலையில் முதல்வர் பழனி சாமி பேசியதற்கு முக ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இது தொடர் பாக அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில், சிறுவன் சுஜித் உயிரி ழந்தது குறித்து எனது ஆதங் கத்தை வெளிப்படுத்தினேன். எனது ஆதங்கத்தை முதல்வரால் புரிந்து கொள்ள முடியவில்லை கோபப்படு வதை தவிர்க்க வேண்டும் என தெரி வித்துள்ளார்.