மாமதுரையின் அன்னவாசல் திட்டத்திற்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் முதுநிலைபயின்று வரும் மருத்துவர்கள் ரூ.1 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர். தங்களுக்கு கிடைக்கும் உதவி தொகையிலிருந்து இந்தப் பணத்தை வழங்கியுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக, அரவிந்த் கண் மருத்துவமனையில் முதுநிலை படித்துவரும் கண் மருத்துவர்கள் சமூக நலத்திட்டங்களுக்கு தங்களது உதவித் தொகையில் ஒரு பகுதியை வழங்கி வருவதாக முதுநிலை பயிற்சி திட்ட இயக்குநர் டாக்டர் வெங்கடேஷ் பிரஜ்னா தெரிவித்துள்ளார். இந்த ஒரு லட்சத்தினை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் வெங்கடேஷ் பிரஜ்னா மற்றும் மருத்துவர்கள் வழங்கினர். மதுரை ரோட்டரி சங்க நிர்வாகி மதன் உடனிருந்தார்.