குடவாசல், ஜூன் 19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் சிறுபுலியூர் ஊராட்சி கிளை யில், பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகி டி.ரவி தலைமையில் ஒன்பது குடும்பங்களை சார்ந்த 21 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர். நிகழ்ச்சிக்கு கட்சியின் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் டி.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஐ.முகமது உதுமான், புதி தாக அமைக்கப்பட்ட கொடிமரத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்து அனை வரையும் வரவேற்றார். கட்சியின் ஒன்றியச் செயலாளர் டி.வீரபாண்டியன் 9 குடும்பங்களை சேர்ந்த 21 பேர்களை கட்சியில் இணைத்துக் கொண்டு கட்சி யின் கோட்பாடுகளை விளக்கி பேசி னார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.எம்.லிங்கம், பி.ஸ்டாலின், பி.ராஜா மற்றும் அம்பலவாணன் சரவண. சதிஸ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.