tamilnadu

img

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் உயர்வு

புதுதில்லி, செப்.17- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.  தில்லியில் செய்தியாளர்களிடம் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் பேசுகையில், 2018-19-ம் நிதியாண்டில் 6 கோடி தொழிலாளர்களின் பெயரில் முதலீடு செய்யப்பட்டிருந்த வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி  விகிதம் 8.65 சதவீதமாக உயர்த்தப்பட் டுள்ளது. பண்டிகைக் காலத்தில் இது தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி.  2017-18-ம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிவிகிதம் 8.55 சதவீதமாக இருந்த நிலையில் அதனை உயர்த்துவது தொடர்பான திட்ட வரைவு மத்திய நிதியமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது.  இந்நிலையில் வட்டி விகிதத்தை 8.65 சதவீதமாக உயர்த்து வதற்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி தொடர்பாக முடிவெடுக்கும் அமை ப்பான அறங்காவலர்கள் மத்திய வாரி யம் (Central Board Of Trustees) ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.