tamilnadu

img

பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம்? 

லண்டன் 
ஊழல் வழக்கில் தண்டனை பெற்று வரும் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ரத்த அழுத்தம், எலும்பு மஜ்ஜை பிரச்சனை காரணமாக பரோலில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சிகிச்சையில் பெற்று வருகிறார். 

இந்நிலையில், நவாஸின் மகன் ஹூசைன் நவாஸ் வியாழனன்று  பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டார்.அதில்,"எனது  தந்தை நவாஸின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அமெரிக்காவில் சிகிச்சை பெற பல்வேறு வகையில் முயற்சி செய்தும் அங்கு எனது தந்தையைக் கொண்டு செல்ல முடியவில்லை. எலும்பு மஜ்ஜை சிகிச்சை மிகவும் அபாயகரமானது என்பதால் நாட்டு மக்கள் பிராத்திக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.  ஹூசைன் நவாஸ் அளித்துள்ள பேட்டியைப் பாகிஸ்தான் ஊடகங்கள்,"நவாஸ் ஷெரீப் அபாய கட்டத்தில் உள்ளார்"எனச் செய்தி வெளியிட, பாகிஸ்தான் மக்கள் நவாஸின் படத்துடன் வீதிகளில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.   

;