லண்டன்
ஐரோப்பா கண்டத்தில் உள்ள முக்கிய நாடான பிரிட்டன் பகுதி இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளின் பகுதியை உள்ளடக்கியது. இந்த பகுதியை இங்கிலாந்து அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்து நிர்வாகம் செய்து வருகிறது.
பிரிட்டன் பகுதியை ஏற்கெனவே கொரோனா உருக்குலைத்த நிலையில், அங்கு மீண்டும் 2-ஆம் அலை துவங்கியுள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து 2-வது அலையயை துவங்கிய கொரோனா முதல் அலையை காட்டிலும் அதிகளவு சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையில் அதிகபட்ச தினசரி பாதிப்பு 8 ஆயிரத்துக்குள் தான் இருந்தது. 2-வது அலையில் இதுவரை இல்லாத வகையில் சராசரியாக 15 ஆயிரத்துக்கு மேல் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில், அங்கு மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 3 அடுக்கு ஊரடங்கு விதிப்பதாக அறிவித்துள்ளார்.
அதில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்:
வீதிகளில் ஆறு நபர்களுக்கு மேல் கூடக்கூடாது.
வெளியில் சென்றால் முகக்கவசம் கட்டாயம்.
தொற்று பாதிப்புகளை கொண்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும்.
மதுபான விடுதிகளும், உணவகங்களும் இரவு 10 மணிக்குள் அடைக்க வேண்டும்.
முடிந்த வரை அலுவல் வேலையை வீட்டிலேயே செய்ய வேண்டும்.
திருமண, இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் 15 நபர்களும், இறுதிச் சடங்கு நடக்கும் இடத்தில் அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே கூட வேண்டும்.
பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு நிலையங்களில் ஏற்கெனெவே பின்பற்றிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்
பயணத்திற்கும், போக்குவரத்திற்கும் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.
குறிப்பிட்ட விதிமுறைகளுடன் அனைத்து கடைகளும் திறக்கலாம்0
உட்புற விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற அனுமதி.
இந்த விதிமுறைகள் ஆறு மாதக் காலத்திற்கு பொருந்தும். 28 நாட்களுக்கு ஒரு முறை விதிமுறைகள் மறுபரிசீலனை செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளார்.