tamilnadu

img

கொரோனா பரவல் எதிரொலி.... உ.பி.,யில்  15 மாவட்டங்களுக்கு சீல்

லக்னோ 
நாட்டின் வடபகுதி மாநிலங்களுள் ஒன்றான உத்தரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் சீரான வேகத்தில் பரவி வருகிறது. அங்கு இதுவரை 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் சிகிச்சையில் மீண்டுள்ளனர். ஊரடங்கு விதிக்கப்பட்டாலும் மாநிலத்தின் 37 மாவட்டங்கள் கொரோனா பரவும் அபாய பகுதியாக உள்ளன. 

இதனால் லக்னோ, கவுதம் புத்தா நகர், நொய்டா, காசியாபாத், மீரட், ஆக்ரா, ஷாம்லி, சஹரன்பூர் உள்பட 15 மாவட்டங்கள் இன்று இரவு முதல் சீல் வைக்கப்படுவதாகவும், அடுத்து எப்போது திறப்பது குறித்து ஏப்ரல் 13-ஆம் தேதி மறு அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அம்மாநில தலைமை செயலாளர் ஆர்.கே. திவாரி அறிவித்துள்ளார்.  
 

;