ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டிட வேலைகளில் ஈடுபட்ட 14 பேர் இடிபாடுகளில் சிக்கினர். இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.