கொரோனாவுக்கான ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து 92% வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கொரொனா நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நாடு முழுவதும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்ய மருத்துவர்கள் கண்டுபிடித்த ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்து கொரோனாவிலிருந்து 92 சதவீதம் வரை மனிதர்களை காப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த தகவல், இடைக்கால சோதனை முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக ரஷ்யாவின் நிதியம் தெரிவித்துள்ளது.