tamilnadu

img

மேகாலயா செல்ல முன் அனுமதி பெற வேண்டுமாம்

வெளி மாநிலத்தவர்கள் மேகாலயாவில் 24 மணி நேரத்திற்கு மேல் தங்க  முன் அனுமதி பெற வேண்டும் என்று அம்மாநில அரசு  சட்டம் இயற்றி உள்ளது.
 இது தொடர்பாக மேகாலயா குடியிருப்போர் பாதுகாப்பு சட்டம் 2016 ல் திருத்தம் கொண்டு வந்துள்ள மாநில அரசு, சட்ட விரோதமாக குடியேறுவதை தடுப்பதற்காக சில புதிய நடைமுறைகளை  சேர்த்துள்ளது. இதன்படி, மாநிலத்தில் 24 மணி நேரத்திற்கு மேல் தங்குவோர், முன்னதாகவே மாநில அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. துணை முதல்வர் டைசங் கூறுகையில், இந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. சட்டசபை கூடும் போது, அவசர சட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.
 

;