பசு வதை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறாதா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பல சந்தர்ப்பங்களில் இறைச்சி அதன் தோற்றத்தை வல்லுநர்களால் பகுப்பாய்வு செய்யப்படாமல் மாட்டு இறைச்சி என கூறப்படுவதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
பசு வதை தடுப்பு சட்டத்தால் மீண்டும் மீண்டும் தரவாக பயன்படுத்துவது தொடர்கிறது. மேலும், அதற்காக அப்பாவி நபர்கள் மீது வழக்கு தொடர்வது கவலையளிப்பதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் திங்களன்று கூறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கிறார்கள். பல வழக்குகளில் இறைச்சி வல்லுநர்களால் ஆய்வு செய்யப்படுவதில்லை. அவ்வாறு செய்யப்படாமலேயே மாட்டு இறைச்சி என வழக்கு பதிவுசெய்யப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ரஹ்மு மற்றும் ரஹ்முதீன் ஆகியோரின் ஜானின் மனுவின் விசாரணையில் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், பசுக்கள் அவற்றின் உரிமையாளர்களால் எவ்வாறு நடத்தப்படுகிறது என கேள்வி எழுப்பியது. பால் கறக்கும் போதும், பால் கறக்கா விட்டாலும், பால் கறக்காத பசுக்கள் அல்லது அவர்கள் பழைய மாடுகளை கொடுப்பதில்லை. சாலைகளிலேயே அலைய விடுகிறார்கள். அவ்வாறு செல்லும் மாடுகள் குறித்து ஆவணங்கள் இல்லை. மாடுகள் எங்கு செல்கின்றன என்று ஒருவருக்கும் தெரியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.
பால் கறந்தபின் பசுக்களின் உரிமையாளர்கள், மாடுகளை சாலைகளில் சுற்றித் திரிவதற்கும், வடிகால் அல்லது கழிவுநீர் போன்ற நீர் பகுதிகளை தேடி செல்லாமல் இருக்க வேண்டும். பாலித்தீன் போன்றவற்றை சாப்பிடுகிறது. மேலும் சாலையில் திரியும் மாடுகள் போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, அவைகளை உரிமையாளர்களுடன் வைத்திருக்க சில வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
குற்ற சாட்டப்பட்டவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் இருந்ததாகவும், உள்ளூர் காவல்துறையினர் தாக்கல் செய்த எப்ஐஆர் ரில் அவரது எதிராக எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், நீதிமன்றம் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் நடந்த இடத்தில் இருந்து கைது செய்யப்படவில்லை. பசுவைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ரஹ்முதீன் ஆகஸ்ட் 5 முதல் சிறையில் இருந்து வருகிறார். இதனால், ரஹ்முதீனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.