ஏப்ரல் 20 முதல் முககவசம் அணியாமல் விதிமுறைகளை மீறியதாக மும்பை மாநகராட்சி (பிஎம்சி) 1.6 லட்சத்திற்கும் அதிகமானவர்களிடம் 3.5 கோடி அபராதமாக வசூல் செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்திருந்தது. இதில், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். அப்போது தான் கொரோனா கட்டுப்படுத்த முடியும் என வலியுறுத்தினார். மேலும், முககவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி திரிபவர்களிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
பிரஹன் மும்பை மாநகராட்சி முகக்கவசம் அணியாமல் விதிமுறைகளை மீறியதாக ஏப்ரல் 20 முதல் அக்டோபர் 29 வரை 1.6 லட்சத்திற்கும் அதிகமானவர்களிடம் ரூ.3.5 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 29 அன்று மட்டுமே விதிமுறைகளை மீறியதாக 9 ஆயிரத்து 107 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.18 லட்சத்து 21 ஆயிரத்து 400 வசூல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஏப்ரல் 20 முதல் அக்டோபர் 29 வரை 1 லட்சத்து 60 ஆயிரத்து 279 பேர் விதிமுறைகளை மீறியதாக ரூ.3,49,34,800 அபராதமாக பிஎம்சி வசூல் செய்துள்ளது.