tamilnadu

img

சர்வதேச முக்கியத்துவப்  பட்டியலில் லோனார் ஏரி....

மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில்  உள்ள லோனார் ஏரி சர்வதேசமுக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் உள்ள ராம்சாரில்உலகின் முதல் சதுப்பு நில பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானித்தின்படி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் மாநாடு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு பல்வேறு நாடுகளில் உள்ள உலக முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நில பகுதிகளை ராம்சார் பகுதி என்று அறிவிக்கும். ராம்சார் என்று அறிவிக்கப்பட்ட இந்த பகுதிகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும், சர்வதேச நிதி உதவி வழங்கப்படும்.இந்தியாவில் மொத்தம் 40 சதுப்பு நில பகுதிகள் ராம்சார்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில்   லோனார் ஏரியும் ராம்சார் எனப்படும், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலமாகஅறிவிக்கப்பட்டுள்ளது. வானத்தில் இருந்து விண்கல் ஒன்று விழுந்ததால் இந்த ஏரி உருவானதாக கூறப்படுகிறது.