tamilnadu

img

டிரம்பைப் போல மோடியும் தூக்கி எறியப்படுவார்... சிவசேனா ஆவேசம்

மும்பை:
அமெரிக்க ஜனாபதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதியும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்டு டிரம்ப் தோற்கடிக்கப்பட்டுள்ளார். புதிய ஜனாதிபதியாக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டிரம்பின் தோல்வி ஒருவகையில் இந்தியப் பிரதமர் மோடிக்கும் ஒரு தோல்வியாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் நடைபெற்ற ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியை, டிரம்ப்-புக்கான தேர்தல் பிரச்சார மேடையாகவே மோடி மாற்றினார். அமெரிக்க வாழ்இந்தியர்கள், டிரம்ப்-புக்கு வாக்களிக்க வேண்டும்என்று நேரடியான வார்த்தைகளில் கூறவில்லையே தவிர, வேறுவேறு வார்த்தைகளில் அதை உணர்த்தினார். அதேபோல டிரம்ப்-பை இந்தியாவுக்கு வரவழைத்து, ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியையும் மோடிநடத்தினார். ஆனாலும், டிரம்ப் தற்போது தோற்றுவிட்டார்.இந்நிலையில், டிரம்ப்பின் தோல்வியில் இருந்தாவது மோடி உள்ளிட்டோர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகைகூறியுள்ளது. அதன் தலையங்கத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:அமெரிக்காவில் கொரோனாவைக் காட்டிலும்முக்கியமான பிரச்சனை வேலைவாய்ப்பின்மைதான். டிரம்ப் இதற்குத் தீர்வு காணாமல், அரசியல் கேலிக் கூத்துகளிலேயே கவனம் செலுத்தி வந்தார். 4 வருடங்களில் டிரம்ப் ஒரே ஒரு வாக்குறுதியைக் கூட மக்களுக்காக நிறைவேற்றவில்லை. தற்போது அங்கு ஆட்சி மாறிவிட்டது. டிரம்ப்-பின் தோல்வியிலிருந்து நாம்(இந்தியா) கற்றுக் கொள்வது அவசியம்.இந்தியாவில் டிரம்பிற்கு எத்தகைய சிறப்பான வரவேற்பு (நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி) அளிக்கப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது. தவறான நபர்களுடன்நிற்பது நமது கலாச்சாரம் இல்லை. இருப்பினும் நாம்அவ்வாறு நின்றோம். 

ஆனால், அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸின் சாதனைகளை கூட,டிரம்ப் கண்டிக்கும் வகையில் பேசியுள்ளார். இதன் மூலம் ஒரு பெண்ணிற்கு எப்படி மரியாதை அளிக்கவேண்டும் என்பது கூட அவருக்கு தெரியவில்லை. எனினும் அமெரிக்க மக்கள் தங்கள் தவறை திருத்திக் கொண்டு டிரம்பிற்கு ‘பை பை’ சொல்லிவிட்டனர்.பீகார் மாநிலத்தை ஆளும் அரசும் இப்படியொரு ‘பை பை’ சொல்லப்படும் நிலையில்தான் இருக்கிறது.நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அங்கு தோல்வியை தழுவப் போவது உறுதி.எங்களை (பாஜக-வை) தேர்வு செய்வதைத் தவிரதேசத்துக்கு வேறு வழியில்லை; மாநிலங்களிலும் மக்கள் பாஜக-வுக்காக காத்திருக்கின்றனர் என்பது போன்று பாஜக தலைவர்கள் உருவாக்கி வைத்துள்ள மாயைகளை மக்கள் உடைத்தெறிய வேண்டும். அதற்கு ட்ரம்ப்பின் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு சிவசேனா கூறியுள்ளது.