இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்று சற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில் சிகிச்சையின் எண்ணிக்கை அதிகப்படுத்துவதில் மூலம் விரைவாக தொற்றுகளை கண்டறிந்து, தொற்று பரவல்களை கட்டுப்படுத்த புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன், ஒரு பகுதியாக 244 புதிய சிகிச்சை மையங்களை மும்பை மாநகராட்சி துவங்கியுள்ளது. மொத்தமாக இதுவரை 300 க்கும் அதிகமான சோதனை மையங்கள் உள்ளது.
கொரோனா தொற்று அறிகுறிகளை இருந்தால் தொடர்பு கொள்ள எண் 1916 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியின் இணையதளமான http: topcoronavirus.mcgm.gov.in என்ற தளத்திலும், விபரங்களையும் தொடர்புகளையும் பெற முடியும். புதிய சோதனை மையங்களில் ஆர்டி.பி.சி.ஆர் சோதனைகள் செய்யப்படுகிறது. மேலும், நோயெதிர்ப்பு சக்தி போன்றவை சோதனை செய்யப்படுகிறது. துவக்கத்தில் இந்த வசதிகளை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தினசரியாக செய்யப்படுகிறது.
புள்ளிவிவரங்களின்படி, இன்று மும்பையில் 908 புதிய கொரோனா தொற்றுக்களும், 25 இறப்புகள் பதிவாகியுள்ளது.