tamilnadu

img

பாஜக தலைவர்கள் பேச்சில் சர்வாதிகாரம் வெளிப்படுகிறது!

மும்பை:
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி, டாக்டர் அம்பேத்கரின் பேரனும், வஞ்சித் பகுஜன் அகாதி கட்சியின் தலைவருமான பிரகாஷ் அம்பேத் கர், தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போது, பாஜக தலைவர் களை கடுமையாக சாடிவரும்பிரகாஷ் அம்பேத்கர், “பாஜகதலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசுவது, ஜனநாயகத்திற்கு சிறிதும்பொருந்தாத சர்வாதிகாரத் தன்மை கொண்டதாக இருக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் பேசி யிருப்பதாவது: பாஜக தலைமையிலான மகாராஷ்டிர அரசு ஊழல் நடவடிக்கையில் ஈடுபடு கிறது. ஆனால், அவற்றைச் செயல்படுத்துவதில், முந்தைய ஆட்சியாளர்கள் கையாண்ட வழிமுறைகளி லிருந்து சற்று மாறுபடுகிறது.சாலை வசதி ஏற்படுத்து வதற்காக போடப்பட்ட பல்வேறு திட்டங்களும் அரசா ங்கத்திற்குப் பணத்தைப் பெற்றுத்தரும் வழிகளாகவே இருக்கின்றன. அத்துடன், இவர்கள் அமல்படுத்தும் நலத்திட்டங்கள் அனைத்தும் முந்தைய ஆட்சியாளர்கள் செய்தவைகளே ஆகும்.சத்துக்குறைபாடு என்பதுபழங்குடியினர் வசிக்கும்கிராமங்களில் மட்டுமல் லாது, மற்ற பகுதிகளிலும் பரவியுள்ளது. ஆனால், அரசு அதைப் பற்றி பேச விரும்புவதில்லை. மேற்கு மகாராஷ்டிரா வின் சில பகுதிகளில் நிலவிவரும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தைக் கருத்தில் கொள்ளாமல், 40 டிஎம்சி நீரை சில தனியார் திட்டங்களு க்குத் தாரை வார்ப்பது, அப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான வழிகளை அடைப்பதாக உள்ளது.இவ்வாறு பிரகாஷ் அம்பேத்கர் பேசியுள்ளார்.

;