மும்பை:
அநாகரிகமான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியால் பிரபலமானவர் அர்னாப் கோஸ்வாமி. ரிபப்ளிக் டிவி-யின் சிஇஓ-வான அவர், தீவிர இந்துத்துவா பேர்வழியும் ஆவார்.இவர், 2 பேரை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில், தற்போது கைது செய்யப் பட்டுள்ளார்.‘ரிபப்ளிக் டிவி’ ஸ்டூடியோவை, பிரபலகட்டட உள்வடிவமைப்பாளரான அன்வாய் நாயக் என்பவரின் ‘கான்கார்ட் டிசைன் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் மூலம் வடிவமைப்பு (Interior decoration) செய்துள் ளார். ஆனால், அதற்குரிய கட்டணம் ரூ.83லட்சத்தை தராமல், மோசடி செய்துள்ளார். அவரைப் போலவே, ஸ்கிமீடியாவைச் சேர்ந்த பெரோஸ் ஷேக் மற்றும் ஸ்மார்ட்ஒர்க் உரிமையாளர் நிதேஷ் சர்தா ஆகியோரும் ரூ. 4 கோடியே 55 லட்சத்தை வழங்காமல் மோசடி செய்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, வடிவமைப்பாளர் (Interior designer) அன்வாய் நாயக் (53) கடந்த 2018-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கூடவே அவரது தாயாரும் தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கை முந்தைய மகாராஷ்டிரபாஜக அரசு மூடிமறைத்து விட்ட நிலையில், அன்வாய் நாயக்கின் மகள் அதன்யாநாயக், புதிதாக வந்த சிவசேனா - காங்கிரஸ் - என்சிபி அரசிடம் முறையிட்டார். உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்-கும்அதன்யாவின் மனுவை ஏற்று மறுவிசாரணைக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
அதைத்தொடர்ந்து, ரூ. 4.55 கோடி மோசடியில் ஈடுபட்ட ‘ஸ்கிமீடியா’ மற்றும் ‘ஸ்மார்ட் ஒர்க்’ நிறுவனங்களின் பெரோஸ் மற்றும் சர்தா ஆகியோரைக் கைது செய்தராய்காட் போலீசார், ரூ. 83 லட்சம் மோசடிசெய்த ‘ரிபப்ளிக் டிவி’ முதலாளி அர்னாப்பையும் புதன்கிழமையன்று கைது செய்துள்ளனர்.முன்னதாக காலை 6 மணிக்கு அர்னாப்பைக் கைது செய்ய வோர்லியில் உள்ளஅவரது வீட்டிற்குச் சென்றபோது, அர்னாப் பும், அவரது மனைவி சம்யாபிரதாவும் கதவைப் பூட்டிக் கொண்டு வெளியேவர மறுத்துள்ளனர். ஒரு மணிநேரத்திற்குப் பிறகு வீடியோ சகிதமாக கதவைத் திறந்த அவர்கள், வாரண்ட் இருக்கிறதா? என்றுகேள்விகேட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். ஐபிசி 306 பிரிவின் கீழான கைது நடவடிக்கைக்கு வாரண்ட் தேவையில்லை என்று போலீசார் விளக்கம் அளித்த போது, அதனை ஏற்காத அர்னாப்பின் மனைவிசம்யாபிரதா, போலீசாரின் கைது அறிக்கையை கிழித்து எறித்துள்ளார். ரிபப்ளிக் டிவி-யின் டிஆர்பி ரேட்டிங்கைஉயர்த்திக் காட்டுவதற்காக, லஞ்சம் முறைகேட்டில் ஈடுபட்டும், அர்னாப் கோஸ்வாமி அண்மையில் மாட்டிக் கொண்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.