tamilnadu

img

ரசாயன ஆலை தீ விபத்தில் 8 பேர் பலி

மும்பை,ஜன.12- மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில்  ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 8 பேர் பலியாகினர்.  அங்க் பார்மா என்ற ரசாயன ஆலையில் ஏற்பட்ட மிகப் பெரிய வெடிச்சத்தம் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை எதிரொலித்தது. இதனால் ஆலை யின் சில பகுதிகள் தகர்ந்தன. இந்த விபத்தில் உயிரிழந்த வர்களின் உடல்கள் மீட்கப்பட் டன. ஆயினும் 13 வயது சிறுமி ஒருவரை காணவில்லை என்று பெற்றோர் கவலையுடன் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிப்பதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

;