tamilnadu

img

“இந்தியாவின் இயக்கு சக்தியாக தமிழ்நாடு விளங்குகிறது”

“இந்தியாவின் இயக்கு சக்தியாக தமிழ்நாடு விளங்குகிறது”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, ஜூன் 10 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று சென்னை தரமணியில் உலக வங்கி யின் நவீன உலகளாவிய வணிக மையத்தை திறந்து வைத்தார். 2001ஆம் ஆண்டு 70 அலுவலர்களுடன் தொடங் கப்பட்ட இந்த மையம், தற்போது 1,500 பணியா ளர்களுடன் 189 உறுப்பு நாடுகளுக்கு சேவை செய்யும் முக்கிய உலகளாவிய மையமாக வளர்ந்து உள்ளது. 2006இல் கலைஞர் கருணாநிதியால் விரி வாக்கப்பட்ட இந்த மையம், தமிழ்நாட்டின் திறமை யான மனித வளம் மற்றும் வலுவான உள்கட்ட மைப்பு காரணமாக உலக வங்கியால் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளது. புதிய மையம் LEED பிளாட்டினம் சான்றிதழ் பெற்ற காலநிலை நட்பு கட்டிடமாகும். சூரிய மின் சக்தி, மழைநீர் சேகரிப்பு, மேம்பட்ட டிஜிட்டல் உள் கட்டமைப்பு ஆகிய நவீன வசதிகளுடன் அமைக் கப்பட்டுள்ளது. நிதி, கணக்கியல், கொள்முதல், மனித வளம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேவை வழங்கும். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், “இந்தியாவின் இயக்க சக்தியாக தமிழ்நாடு திகழ்கிறது. மக்களின் தேவைகளை நிறைவேற்று வதில் உலக வங்கி பெரும் பங்கு வகிக்கிறது” என்று கூறினார். ஏழைகளுக்கான குடியிருப்புக்காக 190 மில்லியன் டாலர் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், “வாழ்ந்து காட்டுவோம்” திட்டத்தின் மூலம் 20 லட்சம் கிராமப்புற ஏழைகள் முன்னேற்றம் அடைந் துள்ளதாகவும் தெரிவித்தார். “தமிழ்நாட்டின் பொருளாதார முதுகெலும்பு பெண்கள்தான்” என்று வலியுறுத்திய முதல மைச்சர், வரும் ஐந்து ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக அறிவித்தார். மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டி யன், மாநிலங்களவை உறுப்பினர் மரு.கனிமொழி,  உலக வங்கி மேலாண்மை இயக்குநர் வென்காய் ஜாங், இந்தியா இயக்குநர் அகஸ்டே டானோ கோமே  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.