tamilnadu

img

‘தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி திருப்பி அனுப்பப்படாது!’

‘தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி திருப்பி அனுப்பப்படாது!’

கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது ரயில்வே

சென்னை, ஜூன் 5 - இந்திய ரயில்வே சார்பில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப் பட்டு - செலவிடப்படாத நிதி, மீண்டும் ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட வில்லை என்று தெற்கு ரயில்வே சமாளித்துள்ளது. தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங் களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி யை சரண்டர் செய்வது தொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் எழுதிய கடிதத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்க டேசன் எம்.பி. விமர்சித்திருந்தார். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை முழு மையாக தமிழகத்திற்கே செலவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி யிருந்தார். சமாளிப்பு விளக்கம் இந்நிலையிலேயே தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டு - செலவிடப்படாத நிதி, மீண்டும்  ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட வில்லை என்று தெற்கு ரயில்வே சமாளித்துள்ளது. “ரயில்வே திட்டப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை அந்த குறிப்பிட்ட காலாண்டில் பயன்படுத்த முடி யாத சூழல் ஏற்படும் பட்சத்தில், அந்த  நிதி மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு அடுத்த காலாண்டில் சோ்த்து பெற்றுக் கொள்ளப்படும். இது ரயில்வேயில் கடைப்பிடிக்கப்படும் வழக்கமான நடை முறை தான்.  ஆனால், இதைத் தவறாகப் புரிந்துகொண்ட சிலா், தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, தெற்கு ரயில்வே, ரயில்வே அமைச்சகத்துக்கே திருப்பி அனுப்பியதாக தவறான செய்தியை ஊடகங்களில் பரப்பி வருகின்றனா். அவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறோம். மாற்றப்படாது என உறுதி மேலும், நடப்பு நிதியாண்டில் தெற்கு ரயில்வேயின் கீழ் தமிழகம் மற்றும் கேரளத்தில் மேற்கொண்டு வரும் திட்டப் பணிகளுக்கு ஒதுக்கப் பட்ட நிதியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.  அத்துடன், தற்போது நடைபெற்று வரும் அனைத்துப் பணிகளும் ஏற்கெனவே திட்டமிட்டபடி தொடர வேண்டும் எனவும் ரயில்வே அமைச்ச கம் உத்தரவிட்டுள்ளது” என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி சு. வெங்கடேசன் எம்.பி.,  

ரயில்வே அறிவிப்பு குறித்து, சு. வெங்க டேசன் எம்.பி. தமது சமூகவலைத்தளப் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: “தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்க ளுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை சரண்டர் செய்வதற்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் எழுதிய கடிதத்தை சுட்டிக் காட்டி நான் கடுமையாக விமர்சித்திருந்தேன். தெற்கு ரயில்வே அதற்கு நேரடியாக பதில் அளிக்காமல் பொதுவான திட்ட கொள்கையை விளக்கி அறிக்கை வெளியிட்டது. அதனையும் நான் விமர்சித்து இருந்தேன். ‘மீசையில் மண் ஒட்டாத’ ரயில்வே மேலாளரின் கதை இப்போது தெற்கு ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி இந்த பிரச்சனை தொடர்பாக இரண்டாவது அறிக்கையை (4.6.25) வெளியிட்டிருக்கிறார். அதில், ‘ஊடகங்கள் அறியாமையால் நிதி  ஆண்டுக்கு சரண்டர் என்று கூறுகிறார்கள். இந்த காலாண்டு பற்றித் தான் தெற்கு ரயில்வே கூறியது. மற்ற காலாண்டுகளில் நிதி ஒதுக்கீடு செயல்படுத்தப்படும்’ என்று சமாளித்துள்ளார்.  ஆனால், தெற்கு ரயில்வே பொது மேலாளர்  எழுதிய கடிதத்தில், ‘2025-26 நிதியாண்டுக்கு இந்த நிதியை பயன்படுத்த முடியாது’ என்றும்; ‘வேறு ரயில்வேக்கு அந்த நிதியை பயன்படுத்தலாம்’ என்றும் தான் இருந்தது. எனவே, நாங்கள் சொன்னது அறியாமையால் அல்ல. தெற்கு ரயில்வே பொது மேலாளரின் கடிதத்தில் இருந்ததைத்தான் குறிப்பிட்டோம். மாறாக, தெற்கு ரயில்வே அதிகாரி தான், கீழே விழுந்தாலும், ‘மீசை யில் மண் ஒட்டவில்லை’ என்று கூறுகிறார்.  அறிவிப்பாக மட்டும் இருந்துவிடக் கூடாது ரயில்வே அமைச்சகமும், ‘தமிழக மற்றும் கேரள வளர்ச்சித் திட்டங்களுக்கு 2025-26க்கு ஒரிஜினல் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டபடி திட்டமிடலும் செயல்பாடும் இருக்கும்’ என்று முடிவு செய்திருப்பதாக இப்பொழுது கூறியிருக்கிறது. இது எங்கள் விமர்சனத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும். இந்த முடிவை, நான் வரவேற்பதோடு இது வெறும் அறிவிப்பாக இல்லாமல் இந்த நிதியை நடைமுறையில் செலவிடவும் தெற்கு ரயில்வேயை வற்புறுத்துகிறேன்”. இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.