‘நடப்போம், நலம் பெறுவோம்’
நாமக்கல் மாவட்டத்தில் சனியன்று நடைபெற்ற அரசு நிகழ்வில் கலந்து கொள்ள வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தின் கீழ் பொதுமக்களுடன் நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி (தெற்கு) முதல் நடைபயிற்சி மேற்கொண்டார். இந்நிகழ்வில் ஆட்சியர் ச.உமா, காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ்கண்ணன், பெ.ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.