திருச்சிராப்பள்ளி/தஞ்சாவூர், ஜூலை 27- ரூ. 75 கோடி மதிப்பிலான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை பெறு வதற்கான காலவரம்பு ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சிராப்பள்ளியில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற “வேளாண் சங்கமம் 2023” மற்றும் விவ சாயிகளுக்கு 50,000 கூடுதல் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் வியாழ னன்று கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2021-2022-ஆம் ஆண்டு 119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடியை மேற்கொள்வ தற்காக கடந்த 2022-ஆம் ஆண்டில் மேட்டூர் அணையை உரிய தேதிக்கு முன்னரே திறந்த காரணத்தினால், டெல்டா மாவட்டங்களில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 47 ஆண்டுகளில் நிகழாத சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டு காலம் தமிழ்நாட்டை ஒரு கட்சி ஆண்டது. பத்து ஆண்டு காலத்தில் மொத்தமே 2 லட்சத்து 20 ஆயிரம் வேளாண் மின் இணைப்புகள் மட்டும்தான் அவர்களால் வழங்கப் பட்டன.
ஆனால் இந்த இரண்டு ஆண்டு காலத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் இணைப்பு களை வழங்கியுள்ளோம். இன்றைக்கு மேலும் 50 ஆயிரம் புதிய மின் இணைப்பு கள் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப் பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை யைவிடக் கூடுதலாக சன்ன இரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 100 ரூபாயும், இதர இரகங்களுக்கு 75 ரூபா யும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில், நெல் கொள்முதலில் ஊக்கத்தொகையாக மட்டுமே 376 கோடியே 63 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கரும்பு விவ சாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு அறிவித்த ஆதார விலை யான டன் ஒன்றுக்கு 2,821 ரூபாய்க்கு மேல் 195 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை யாக வழங்கி வருகிறது. கரூர், நாகப்பட்டினம், சிவகங்கை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மூன்று புதிய அரசு வேளாண்மைக் கல்லூரி களும், ஒரு தோட்டக்கலை கல்லூரி யும் 40 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும், ரூ. 75 கோடி மதிப்பிலான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை பெறுவதற்கான காலவரம்பு ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படுகிறது என்றும் முதல்வர் அறிவித்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி, எ.வ.வேலு, எஸ்.எஸ்.சிவசங்கர், டி.ஆர்.பி.ராஜா, ஆட்சியர் மா.பிரதீப் குமார் மேயர் மு.அன்பழகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.