‘புதுதில்லி, டிச.10- தமிழ்நாடு குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத் தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயி ரிழந்தனர். விபத்து குறித்து பல்வேறு உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, விபத்து நடைபெறுவதற்கு முன்பு மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரை இயக்குவதற்கு பைலட்டுகள் மறுத்ததாகவும் ஆனால், உயர் அலுவலர்களின் அழுத்தத்தின் காரண மாகவே ஹெலிகாப்டர் இயக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இதுபோன்ற உறுதிப்படுத் தப்படாத யூகங்களை தவிர்க்க வேண்டும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப்படையின் அதிகா ரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஹெலிகாப்டர் விபத்தின் காரணம் குறித்து அறிய முப்படை நீதிமன்ற விசார ணைக் குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்த விசாரணை விரை வாக மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் வெளிக் கொண்டு வரப்படும். அது வரை, உயிரிழந்தவர்களை களங்கப்படுத்தும் வகை யில், உறுதிப்படுத்தப்படாத யூகங்களை தவிர்க்கவும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.