tamilnadu

img

உயர்ந்து வாழணும்! - கோவி.பால.முருகு

படிக்கும் போதேநீ பழகிக் கொள்ளணும்-நாட்டைப்
    பிடிக்கும் துன்பமதைப் புரிந்து வெல்லணும்!
சாதிமத அரசியலை வெறுத்து ஒதுக்கணும்-அவை
    தீதென்று ஒழித்திடவே முயற்சி செய்யணும்!
நாட்டை ஆளும் அரசியலை அறிந்துகொள்ளணும்-     
                    நல்ல
    ஆட்சிதானா என்றுநீயும் ஆய்ந்து பார்க்கணும்!
ஆய்ந்தவற்றை அனைவருக்கும் அறிய வைக்கணும்
    பாய்ந்துவரும் மதவெறியின் பல்லைப் 
                பிடுங்கணும் 
உழவின் மேன்மையதை உரக்கப் பேசணும்-அதில்
    உழவர் உயரும்நல் உறுதி இருக்கணும்!
தொழிலாளி வர்க்கத்தின் உயர்வைப் பேசணும்-
                    அவரை
    ஒழிக்கின்ற முதலாளி வர்க்கம் கூசணும்!
கல்விக் கூடமெல்லாம் அரசே ஆளணும்-அங்கே
    கல்வி வியாபாரிகள் கடையை மூடணும்!
தாராள தனியார்மயம் தடுத்து நிறுத்தணும்-
                    நாட்டின்
    தவறான கொள்கையதை விரட்டி ஓட்டணும்!
படிப்போடு பல்லறிவும் பெற்றே உயரணும் -அந்த
    பிடிப்போடு நாளும்மிக உயர்ந்து வாழணும்!