tamilnadu

ஏற்காடு: முழுவீச்சில் கோடை விழா ஏற்பாடு பணிகள்

சேலம், மார்ச் 21- ஏற்காட்டில் நடைபெற உள்ள கோடை விழா மற்றும் மலர் கண் காட்சி பணிகள் முழு வீச்சில் நடை பெற்று வருவதாக தோட்டக்க லைத்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். ஏழைகளின் உதகை என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா மற்றும் மலர் கண் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுக ளாக ஏற்காட்டில் கோடை விழா  மற்றும் மலர் கண்காட்சி நடத்தப் படவில்லை. இதனிடையே, கொரோனா நோய்த்தொற்று கட் டுக்குள் வந்ததைத் தொடர்ந்து நடப்பாண்டு ஏற்காட்டில் கோடை விழா, மலர் கண்காட்சி நடத்த ஏற் பாடுகள் நடந்து வருகின்றன. இதை முன்னிட்டு அண்ணா பூங் காவில் சுமார் 15 ஆயிரம் பூந்தொட் டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் வைத்து பராமரிக்கப் பட்டு வருகிறது. ஆனால், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மே மாதத்தில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. இதனால் பொதுத்தேர்வு முடி வடைந்தவுடன் கோடை விழாவை நடத்தலாமா? என்பது குறித்து அதி காரிகள் ஆலோசனையில் ஈடு பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோடை விழா  மற்றும் மலர் கண்காட்சி நடத்து வதற்கான முன்னேற்பாடு பணி கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர்  செ.கார்மேகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில், ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை சிறப்பான முறையில் நடத்துவது என்றும், அனைத்து அமைச்சர்களையும் அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்ப டுகிறது. ஆனால், எந்த தேதியில் மலர் கண்காட்சி நடத்துவது என்று இன்னும் முடிவு செய்யப்பட வில்லை. மலர் கண்காட்சிக்கு வழக்கமாக சுமார் 10 ஆயிரம் பூந்தொட்டிகளில் பல வகை யான மலர்கள் பார்வைக்காக வைக்கப்படும். ஆனால், நடப் பாண்டு 15 ஆயிரம் தொட்டிகளில் பல வகையான பூ விதைகள் வைத்து அதை தோட்டக்கலைத் துறை அலுவலர்களால் கண்கா ணிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தோட்டக் கலைத்துறை அதிகாரிகள்  கூறுகையில், ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. டபுள் லைட், மார்கோ போலோ, மேஜிக் லேன்டர், பேமிலி மூன், சம்மர் ஸ்நோ, ரெட் டிரான், சம் மர் டைம், பர்புல்மூன், மிலகி வே,  சில்வர் லிவிங், டேபிள் மவுண் டைன், புளோரிமண்டா உள்பட 15 வகையான ரோஜாக்களும், லில்லியம், ஜினியா, மேரி கோல்டு, சால்வியா, ஆஸ்டர் உள் ளிட்ட பலவகையான மலர்க ளும் கண்காட்சிக்கு வைக்கப் பட உள்ளது. மேலும், புதிய வர வாக உதகை, கொடைக்கானலில் இருந்து லில்லியம் என்ற வகை பூக்களும் பார்வைக்கு வைக்கப் பட உள்ளது, என்றனர்.