tamilnadu

img

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரம்

மதுரை, நவ.24- உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை வளாகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை இல்லா வளாகமாக அறிவித்து மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரங்களை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி மகாதேவன் வியாழனன்று துவங்கி வைத்தார். இந்த விழாவில் சுற்றுசூழல், பருவநிலை மாற்றம், வனத்துறை ஆகியவற்றின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்பிரியா சாகு, உயர்  நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி, ஜி.ஆர்.சுவாமிநாதன், பவானி சுப்ப ராயன், விஜயகுமார், சத்யநாரா யண பிரசாத், தமிழ்நாடு சுற்றுச் சூழல் வாரியத்தின்  தலைவர் ஜெயந்தி முரளி, மதுரை மாவட்ட ஆட்சியர்எஸ். அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட னர். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையின் நிர்வாக நீதிபதி மகா தேவன் மஞ்சள் பை வழங்கும் தானி யங்கி இயந்திரத்தை பயன்பாட் டிற்கு கொண்டு வந்து, மஞ்சள் பையின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். அவர் பேசுகையில், மீண்டும் மஞ்சள்பைத் திட்டத்தை தமிழக  அரசு துவங்கியுள்ளது. நெகிழி களை தடை செய்வதன் முக்கி யத்துவத்தை உணர்த்தும் வித மாக மஞ்சள் பைத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நெகிழிப் பொருட் கள் சுற்றுச்சூழலை மிகவும் மாசு படுத்துகிறது. இவ்விடத்தில் பழைய பழ மொழி ஒன்றை கூற விரும்புகிறேன் “மஞ்சள் மலிந்திருக்க மர ணம் தணிந்திருக்கும்”. அன்றாட வாழ்வில் நாம் மஞ்சளை பயன்  படுத்தினால் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லதோ அதே போன்று மஞ்சள் பையை பயன் படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் நன்மையை பயக்கும். மஞ்சள் பை திட்டத்திற்கு அனை வரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.கல்யாணங்களில் மஞ்சப்பை வழங்குவது வழக்கம் பழமையான மஞ்சள் பையை பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க லாம் என்று  தெரிவித்தார்.