tamilnadu

img

அரசு ரப்பர் கழகத்துடன் ஊதிய ஒப்பந்தம்

நாகர்கோவில், டிச. 6- தமிழ்நாடு அரசு ரப்பர் கழகத்துடன் தொழி லாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக  தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தொழி லாளர்கள் புதனன்று (டிச.7) வேலைக்கு திரும்பு கிறார்கள். குமரி மாவட்டத்தில் கீரிப்பாறை, மண லோடை, பரளியாறு, காளிகேசம், சிற்றாறு, மரு தம்பாறை, குற்றியார், கோதையார் பகுதி களில் அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 500  ஹெக்டேர் பரப்பில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இவற்றை வனத்துறையின் கீழ் உள்ள  அரசு ரப்பர் கழகம் நிர்வகித்து வருகிறது. 2016 இல் ஏற்பட்ட தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்  தம் 30.11.2019 அன்று காலாவதியானது. தொழி லாளர்கள் சார்பில் தொழிற்சங்கங்கள் முன்  வைத்த ஊதிய உயர்வு கோரிக்கை மீது கடந்த  3 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்று  பேச்சுவார்த்தைகள் நடந்தன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 3 அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்த விவரங்கள் இறுதி செய்யப்பட்டன. ஆனாலும், ரப்பர் கழக  அதிகாரிகளின் பிடிவாதம் காரணமாக ஒப்பந் தம் ஏற்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.     இந்நிலையில் 9 கோட்ட ங்களில் பணியாற்  றும் சுமார் 2 ஆயிரத்து 500 தொழிலாளர்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். சுமார்  30 நாட்களாக போராட்டம் நடைபெற்ற நிலை யில் திங்களன்று (டிச.5) நாகர்கோவில் வட சேரியில் உள்ள அரசு ரப்பர் கழக அலுவல கத்தில் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.  இதில் நிர்வாக இயக்குநர் தின்கர்குமார், பொது  மேலாளர் எஸ்.குருசாமி, தொழிற் சங்க நிர்வாகி கள் எம்.வல்சகுமார் (சி.ஐ.டி.யூ), சுகுமாரன் (தொ.மு.ச), பால்ராஜ் (ஐ.என்.டி.யூ.சி),மகேந்  திரன் (ஏடிபி), இளங்கோவன் (ரப்பர் தோட்ட தொழிலாளர் பேரவை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில் ரூ.40 தினக்கூலி உயர்வை 2019 டிசம்பர் முதல் வழங்குவது என  உடன்பாடு ஏற்பட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை நடத்து வது எனவும் முடிவு செய்ய ப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தை தொழிலாளர் நல அதிகாரி முன்னிலையில் கையெழுத்திட  வேண்டும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்  பில் வலியுறுத்த ப்பட்டது. இதனைத் தொடர்ந்து  ஊதிய நிலுவைத் தொகையை எப்போது இருந்து வழங்கு வது என்பது குறித்த பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. தொழிலாளர் துறை துணை ஆணையர் ஜே.மணிகண்டபிரபு முன்  னிலையில் நடந்த இறுதி கட்ட பேச்சுவார்த்தை யில் முந்தைய ஒப்பந்தம் காலவாதியான 2019  நவம்பர் முதல்   2022  நவம்பர் வரையிலான காலத்  திற்கு வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை நள்ளிரவு கடந்தும் நீடித்தது. ஒருவழியாக டிசம்பர் 6 செவ்வா யன்று அதிகாலை 2.30 மணிக்கு பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்தது. வருகிற 15 மற்றும் 22-ந் தேதி என 2 தவணைகளில் ஊதிய நிலுவை தொகையை வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டது. ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகை போன்ற பிரச்சினைகள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தொழிலாளர்கள் உடனடி யாக பணிக்கு திரும்புவதென முடிவு செய்த னர். அதன்படி புதனன்று  அனைத்து தொழிலா ளர்களும் பணிக்கு திரும்ப உள்ளனர். இந்த  ஒப்பந்தத்துக்கான காலாவதி நாள் 30.11.2022 என்பதால் புதிய கோரிக்கைகளை முன்வைக்க  தொழிற்சங்கத்தினர் தயாராகி வருகின்றனர். அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தொழிலாளர்களுக்கும், அர சியல் கட்சிகள் அமைப்புகள் மற்றும் பொது மக்களுக்கும் தொழிற்சங்க தலைவர்கள் நன்றி தெரிவித்தனர்.