tamilnadu

img

தூத்துக்குடி துறைமுக சொத்துக்களை விற்பதா?

தூத்துக்குடி, மார்ச் 7- பணமாக்கல் திட்டம் என்ற  பெயரில் துறைமுக சொத்துக்களை  விற்பதை நிறுத்த வேண்டும் என்று  வலியுறுத்தி  துறைமுக நிர்வாக அலு வலகம் முன்பு துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில்  ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துறைமுக தொழிலாளிக்கு வழங்க வேண்டிய 2020-21, 2021-22 ஆம் ஆண்டுக்கான போனஸ் பேச்சு வார்த்தையை  பேசி முடித்து நிலு வைத் தொகையை வழங்க வேண்  டும், கடந்த பத்து ஆண்டுகளில் துறைமுகங்களில் காலியாக உள்ள 33,957 காலி பணியிடங்களை நிரப்ப  வேண்டும், ஒப்பந்த தொழிலாளர் களை நிரந்தரப் படுத்த வேண்டும், துறைமுக மருத்துவமனைகளை தனியார் பங்கேற்பு என்ற பெயரில் கார்ப்பரேட் கொள்ளையருக்கு தாரை வார்க்கக் கூடாது, மேஜர்  போர்ட் அதாரிட்டி 2021 கீழ் தேர்  வான டிரஸ்டிகளை மறுபடியும் அர சிதழில் வெளியீடு செய்து பதவியில்  அமர்த்த வேண்டும், லேபர் டிரஸ்டி இல்லாமல் துறைமுக போர்டை நடத்தக்கூடாது, 40 ஆண்டுகளாக பணிபுரியும் வ.உ.சி துறைமுக  கேண்டின் தொழிலாளர்களை பணி யில் சேர்த்த காலம் முதல் துறைமுக ஊழியராக அறிவித்திட வேண்டும், 1.1.1997 முதல் 31.12.2006 வரையி லான காலத்தில் ஓய்வு பெற்ற ஊழி யர்களுக்கு ஏற்பட்டுள்ள பென் சன் இழப்பை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி ஈடு செய்ய உத்தரவிட வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்  தப்பட்டன. துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கத்தின் தலைவரும், லேபர் டிரஸ்டியூமான பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணை பொதுச்செயலாளர் ஆனந்த முரு கன், ராஜகுமார் அலுவலக செயலா ளர் நாகராஜன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். பொதுச் செயலா ளர் காசி ,நீர்வழி போக்குவரத்து சம்மேளனத்தின் செயலாளர் ரசல், சிஐடியு மாவட்டத் தலைவர் பேச்சி முத்து, மாவட்டப் பொருளாளர் அப்பாதுரை, மாவட்ட துணைத் தலைவர் முனியசாமி, முன்னாள் டிரஸ்டி ராயல், கோபால், ஓய்வூ தியர் சங்கத்தின் தலைவர் டாக்டர்  சிவநாகரன், நீர்வழிப் போக்கு வரத்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் நரேந்திர ராவ் ஆகி யோர் உரையாற்றினர். சங்க பொரு ளாளர் மீனாட்சி சுந்தரேசன் நன்றி கூறினார்.