மயிலாடுதுறை, டிச.16 - ஆணைக்குளத்தையொட்டி வசிக்கும் பழங்குடியின சமூ கத்தை சேர்ந்த 4 குடியிருப்புகளுக்கு இதுவரை மின்சார வசதி இல்லாததால் கடும் சிரமத்தை அனுபவிக்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஆணைக்குளம் பகுதியில் வசிக்கும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சங்கர், சாமிக்கண்ணு, பக்கிரிசாமி, ராஜேந்திரன், ஆகிய 4 குடும்பங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் அந்தப் பகுதி யில் கடந்த 3 தலைமுறைகளாக குடிசைகளை கட்டி வசித்து வருகின்றனர். அனைவரும் திருக்கடையூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்துக் கொண்டு சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அனைத்து குடும்பங்களிலும் கல்லூரி மற்றும் பள்ளி களில் பயிலும் பிள்ளைகள் உள்ளனர். ஆனால் இதுவரை 4 வீடு களுக்கும் மின் இணைப்பு வழங்கப்படாத அவல நிலை நீடிக் கிறது. அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்து சோர்ந்து போயுள்ளனர். இதுகுறித்து அந்த மக்கள் கூறியதாவது: தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி ஆலயத்தின் பெயரிலுள்ள இடத்தில் அவர்கள் வசிப்பதாகவும், தடையில்லா சான்றினை கோவில் நிர்வாகம் வழங்க வேண்டுமென்றால், ஒவ்வொரு குடியிருப்பினரும் ரூ.60 ஆயிரம் வரை கட்டணமாக பணம் கேட்பதாகவும், அவ்வ ளவு பணத்திற்கு நாங்கள் எங்கே போவது? நாங்கள் எல்லா ருமே ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்கிறோம்; ஊரு முழுக்க கிடக்கும் குப்பை, கழிவுகளை சுத்தம் செய்கிறோம். ஆனா எங்களுக்கு கரண்ட் கொடுக்க ஆதீனம் சாமி என்.ஓ.சி தரணும்னா பணம் தரணுமாம். அந்த சாமி காலுலேயேகூட விழுந்து கேட்டு பாத்துட்டோம்... இரக்கம் காட்ட மாட்டுது ஆதீனம் சாமி. இருண்டு கிடக்கும் 4 வீடுகள் படிக்கிற பசங்க மெழுகுவர்த்திய வச்சிக்கிட்டுதான் படிச்சி காலேஜ் வரை வந்துட்டுங்க. ராத்திரில பாம்பு, தேள், பூரான்லாம் வருது. பயத்துலதான் வசிக்குறோம்...! இந்த அட்ரசுல தான் ஓட்டு போடுற கார்டு, குடும்ப கார்டு, ஆதாருலாம் இருக்கு. ஆனா இது கோவிலு இடமாமே... மழை பெய்யுறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு. கலெக்டர் வர்றப்பலாம் நாளு முழுக்க சுத்தம் செய்யுறோம், எங்களுக்கு கரண்ட் தரமாட்றாங்க..! என தங்களது வேதனையை வெளிப்படுத்தினர். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இந்த 4 குடி யிருப்புகளைச் சுற்றியுள்ள மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களின் குடியிருப்புகளிலெல்லாம் மின் இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளன. ஆனால் ஊரை சுத்தம் செய்து மக்களின் சுகா தாரத்தை பாதுகாக்கும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 4 குடி யிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் நிறைவேற்ற நட வடிக்கை எடுப்பாரா?