tamilnadu

கொம்பியாவில் மாற்றம் ஏற்படுமா?

2022-ல் கொலம்பியாவில் ஜனாதிபதி தேர்தல் நடை பெறுகிறது. முக்கியமான தேர்தல். 1948 ஆம் ஆண்டு முதலே கொலம்பியாவில் வன்முறை, கொலை சம்பவங்கள் ஏராள மாக நடைபெறுகின்றன. வளர்ச்சி மற்றும் அமைதி குறித்து ஆய்வு நடத்தும் நிறு வனம் டிசம்பர் 14 இல் ஒரு அறிக்கை வெளி யிட்டது. 2020-ஐக் காட்டிலும் 2021-ல் படு கொலைகள் எண்ணிக்கை அதிகம் எனக் குறிப்பிடுகிறது. 2021 இல் 164 சுற்றுப்புற சூழலியலா ளர்கள், மனித உரிமை பாதுகாப்போர், சமூக, விவசாய தலைவர்கள் மற்றும் கொலம்பியாவின் புரட்சிகர ராணுவ  வீரர்களின் கொரில்லா குழுவின் முன் னாள் படைவீரர் 44 பேர், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருப்போர் மற்றும் போதை மருந்து கடத்தும் குழுவினரால் கொல்லப்பட்டுள்ளனர். கொலம்பியா அரசும் புரட்சிகர படைகளும் 5 ஆண்டு களுக்கு முன்னாள் சமாதான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் 1278 முன் னணி வீரர்கள் மற்றும் அமைதி ஒப்பந் தத்தில் கையொப்பமிட்டோர் 293 பேர் கொலை செய்யப்பட்டதாகவும் ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

இக்கொலைகளில் 69 சதவீதத்திற்கு மேல் தீவிர வலதுசாரி ஜனாதிபதி அவான் டூத் ஆட்சியில் நடை பெற்றது. கஞ்சா செடி உற்பத்தி உயர்வு, சமூக அசமத்துவம், போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டுள்ள சட்டவிரோத ஆயு தம் தாங்கிய குழுவினர் தான் கொலம் பியாவில் வன்முறை உயர்வுக்கு கார ணம். நிலத்தையும் இயற்கை வளங் களை பாதுகாக்கவும், சட்டவிரோத பயிர்கள் பயிரிடுவதை நிறுத்தவும் போரா டுபவர்கள் குறிவைத்து தாக்கப்படு கிறார்கள்.  2021 டிசம்பர் 10ல் சர்வதேச மனித உரிமை நாளன்று ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி பேரணி ஆர்ப்பாட்டம் அமைதியாக நடத்தினர். அவர்களது மைய கோரிக்கை ஜனாதி பதி இவ்வாண்டு கிராமப்புறங்களில் நடை பெறும் ஆயுத வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே. கிராமப் புறங்களில் அரசின் பிடி பலவீனமா கவே உள்ளது. நகரங்களுக்கு குடி பெயர்ந்தால் பாரபட்சமாக நடத்தப்படு கிறார்கள். அமெரிக்காவின் மிக நெருங் கிய கூட்டணி நாடு கொலம்பியா என்பது குறிப்பிடத்தக்கது.