சிதம்பரம் இரவிச்சந்திரன்
2023இல் உலகில் வாழும் 23 பேரில் ஒருவருக்கு மனி தாபிமான உதவி தேவைப்படும் என்று ஐநா எச்சரிக்கிறது. இதற்காக முன்பு எப்போதும் இல்லாத சாதனையளவாக 51.5 பில்லியன் டாலர் உலகளாவிய கூடுதல் உதவி தேவை என்று ஐநா அறிக்கை கூறுகிறது. இது 2022இல் ஏற்பட்ட அதிதீவிர சூழல் சீரழிவுகளால் பாதிக்கப்பட்ட 339 மில்லி யன் மக்களுக்கு அவசியமானது.
சாபமான வரம்
கடந்த ஆண்டை விட உதவி தேவைப் படும் மக்கள் எண்ணிக்கை 25 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 65 மில்லியன் அதிக மக்கள் உயிர் வாழ அவசியமானது. 2023இல் இவர்கள் வாழ இந்த நிதி உதவும் என்று ஐநா மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணப் பணிகளுக்கான செயலகத்தின் ஒருங்கி ணைப்பாளர் மார்ட்டின் கிரிபித்ஸ் (Martin Griffiths) கூறுகிறார். உதவியின் அளவு 2022இன் தொடக்கத்திலேயே முன்பிருந் ததை விட 25% அதிகரித்திருந்தது. கொடை யாளர்கள் தாராளமாக நிதியுதவி செய்தாலும் தேவை அதிகம். ஐநா புள்ளிவிவரங்களின்படி 2019இல் நிவாரணம் தேவைப்படும் மக்கள் எண்ணிக்கை நூறு மில்லியனாக இருந்த போது உதவித்தொகை 132 பில்லியன் டாலர்கள். இன்று இது 339 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. சோமா லியா, ஆப்கானிஸ்தான், ஏமன் போன்ற நாடுகளில் உள்ள உள்நாட்டு கலவரம் உள்ளிட்ட காரணங்களால் உணவுத் தட்டுப் பாடு கடுமையாக உள்ளது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பட்டினி கிடக்கின்றனர். புவி வெப்ப உயர்வு பாகிஸ் தான் போன்ற நாடுகளில், வரமாக இருந்த பருவமழை சாபமாக (monsoon on steroids) மாறியுள்ளது.
மூன்றாவது பெரிய நாடு
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப் படும் மக்களின் வாழ்வாதாரத்திற்காகத் தேவைப்படும் நிதி குறித்த விவரங்களை “உலகளாவிய மனித நிவாரணம் ஒரு பார்வை ” (GHO) என்ற பெயரில் ஐநா ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிறது. உதவிக்காக ஏங்கும் மக்களின் எண் ணிக்கையை மட்டும் கணக்கிட்டால் மக்கள் தொகை அதிகமுள்ள சீனா, இந்தியா விற்கு அடுத்தபடி இதுவே உலகின் மூன்றா வது பெரிய நாடாக இருக்கும். இந்த மக்கள் உலகின் பல பகுதிகளில் 68 நாடுகளில் வாழ்கின்றனர். என்றாலும் ஐநா 1 பில்லியன் (100 கோடி) டாலர் உதவிக்கான நிவாரணப்பணிகளைத் தொடங்கியுள்ள 10 நாடுகளில் தேவை மிக அதிகமாக உள்ளது.
ஐநாவின் புள்ளிவிவரங்கள்
இந்நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ் தான், சிரியா, ஏமன், எத்தியோப்பியா, காங்கோ மக்கள் குடியரசு, சோமாலியா போன்றவை அடங்கும். இப்பகுதிகளில் வரலாறு காணாத கொடும் பஞ்சம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. 2023ல் ஆப்கா னிஸ்தானிற்கு 4.6 பில்லியன், சிரியாவிற்கு 4.4 பில்லியன், ஏமன் நாட்டிற்கு 4.3 பில்லி யன், எத்தியோப்பியாவிற்கு 3.5 பில்லி யன், காங்கோ மற்றும் சோமாலியாவிற்கு 2.3 பில்லியன், தெற்கு சூடான் மற்றும் சூடான் நாடுகளுக்கு 1.3 பில்லியன், நைஜீரியாவிற்கு 1.2 பில்லியன் டாலர் நிவாரண உதவி தேவைப்படுகிறது.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும்போது
இன்றுள்ள நிலையில் 230 மில்லியன் மக்களுக்கு தேவையான உதவியை ஐநா மற்றும் பங்காளி நாடுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் 2022இல் கிடைக்கவேண்டிய உதவியில் 44 விழுக்காடு மட்டுமே கிடைத்தது. இது கொடையாளி நாடுகளின் குற்றமில்லை என்று மார்ட்டின் கூறுகிறார். யுகே தவிர மற்ற நாடுகள் உதவி செய்தன. என்றாலும் பெருமளவிலான மக்களுக்கு நிவாரணம் அவசியமாக இருப்பதால் அவர்களுக்கு அதைக் கிடைக்கச்செய்வதில் பல இடர்பாடுகள் உள்ளன என்று அவர் கூறுகிறார்.
வரும் ஆண்டு எப்படி இருக்கும்?
பூமி சூடாகிக்கொண்டிருப்பது, கொரோ னாவின் தாக்கம், காலநிலை மாற்றம் போன்றவை சேர்ந்து நிலைமையை மோசமாக்குகிறது. இதனால் 2023 கடந்த காலத்தை விட மோசமாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. 53 நாடுகளில் வாழும் 222 மில்லியன் மக்கள் இதனால் கடும் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள் வர். 37 நாடுகளில் இருக்கும் 45 மில்லியன் மக்கள் உணவில்லாமல் உயிரிழக்கும் ஆபத்து உள்ளது என்று அறிக்கை கூறுகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் உலகம் மீளாதபோது காலரா, மற்ற நோய்கள் பெருகும். வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் உயிர் வாழப் போராடும் மக்களுக்கு இந்த நிதியுதவி அவர்களை மரணத்தில் இருந்து மீட்டு வர உதவும் நிதி. பசி பட்டினியால் உலகில் எந்த ஒரு உயிரும் இழக்கப்படக்கூடாது என்ற முனைப்புடன் சர்வதேச சமூகம் செயல்பட்டால் மட்டுமே இந்நிலை மாறும். உதவிக்கரம் நீட்ட உலகம் தயாராகுமா?