குட்டி ஜப்பான், டாலர் சிட்டி என்றெல்லாம் புக ழப்பட்ட திருப்பூர், பொறுப் பற்ற மோடி அரசின் கொள் கைகளால் பொலிவிழந்து காணப்படுகிறது. முந் தைய நிலை வருமா என ஏக்கத்தில் மக்கள் உள்ள னர். 1990க்கு பின்பு திருப்பூரில் உள்நாட்டு பனி யன் உற்பத்தியோடு ஆயத்த ஆடை ஏற்றுமதி யும் துவங்கியது. தமிழகத்தின் இதர மாவட்ட தொழிலாளர்கள் வேலை தேடி வந்தனர். ஏற்று மதியாளர்கள் முயற்சியாலும், தொழிலாளர் களின் கடும் உழைப்பாலும் வானுயர கம்பெனி கட்டிடங்கள் உயர்ந்தன. நவீன இயந்திரங்கள், புதிய தொழில் நுட்பம், நட்சத்திர ஓட்டல்கள், வெளிநாட்டு பையர்கள் (வர்த்தகர்கள்) வந்த னர். தொழிலாளர்கள், பெண்கள் உள்பட இரவு பகல் பாராமல் விடிய, விடிய உழைத்தனர். ஞாயிறு விடுமுறை இல்லை. பண்டிகை நாட்களி லும் வேலை செய்தார்கள். இதனால் திருப்பூர் அசுரத்தனமான வளர்ச்சி பெற்றது. வெறும் ரூ.50 கோடியிலிருந்த ஏற்றுமதி, தற்போது ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் அதிகமானது. திருப்பூர் மட்டுமின்றி சுற்று வட்டாரப் பகுதிகளான பல்ல டம், காங்கேயம், அவினாசி, பெருந்துறை, தாரா புரம் என்று பல்வேறு பகுதிகளில் பனியன் தொழில் வளர்ச்சி விரிவடைந்தது. பனியன் ஆயத்த ஆடை, உப தொழில்களில் சுமார் 8 லட் சம் பேர் பணி புரிந்தனர்.
வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்ப ரம் அதிகமானது. கட்டிங், அயர்ன், பேக்கிங், டைலர், செக்கிங், பிரிண்டிங், டையிங், ஹெல் பர்கள் என்று எல்லா பிரிவுகளிலும் பயிற்சி பெற்று உழைத்தார்கள், இவ்வகை தொழிலா ளர்கள் பலர் கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்களின் ஈடு இணையற்ற உழைப்பால் பெறும் வளர்ச்சியில் ஏற்றுமதி யின் மூலம் அந்நிய செலாவணி பல ஆயிரம் கோடி டாலர் ஒன்றிய அரசுக்கு கிடைத்தது. பனியன் உரிமையாளர்களும் ஏற்றுமதியாளர் களும் லாபம் ஈட்டி பெரும் வளர்ச்சி அடைந்த னர். கிடைத்த லாபத்தில் பஞ்சாலை, எஸ்டேட், கிரானைட், ரியல் எஸ்டேட் தொழில்களில் முத லீடு செய்தனர். மேற்கண்ட வளர்ச்சியின் மூலம் கிடைத்த பலன், உழைத்த தொழிலாளர்களுக்கு முழுமை யாக கிடைக்காமல் மறுக்கப்பட்டது. தொழிற் சங்க நடவடிக்கை முன்னெடுப்பால் சம்பள உயர்வு, சிறிய சலுகைகள் பெற்றுத் தரப்பட் டது. மற்றபடி முழுமையான சமூக பாதுகாப்பு அடிப்படை தேவைகள் வழங்காமல் மறுக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில், திருப்பூர் தொழில் மோடி அரசின் தாறுமாறான - தவறான கொள்கையால் பெரும் பாதிப்பை எதிர் கொண்டு கீழ்நோக்கி செல்கிறது. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, ஊக்கத் தொகை குறைப்பு, வங்கிகளின் உதவி இன்மை போன்றவைகளால் தொழில் நலிவடைந்து பாதிக்கப்பட்டுள்ளது என்று ஏற்றுமதியாளர்கள் வெளிப்படுத்தும் பிரச்சனைகள் தீவிரமாகியுள்ளன.
மேலும் மூலப் பொருளான பஞ்சு, நூல் விலை வரலாறு காணாத உயர்வு இந்த ஆண்டு முழுவதும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. ஒன் றிய அரசு தலையிடாமல் வேடிக்கை பார்த்தது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என்பது வேதனையின் உச்சமாகும். ரூ.1 லட்சம் கோடிக்கு ஆர்டர் வரும்; ஏற்று மதி பெருகும் என்று மோடிக்கு ஆதரவான ஏற்றுமதியாளர் சிலர் அறிக்கை வெளியிட்டு தம்பட்டம் அடித்தார்கள். பொய் மட்டுமே பேசு வதில் விருது பெற்ற மோடியின விசுவாசி கள் ஏமாற்றம் அடைந்தனர். திருப்பூர் தொழி லாளிகள் ஏமாற்றப்பட்டனர்! சுதேசி பேசிய மோடி அரசு, உள்நாட்டு தொழில் பாதிப்பில் உள்ளபோது வங்கதேசத் தில் இருந்து ரூ.18 ஆயிரம் கோடிக்கு டி.சர்ட், பனியன் இந்தியாவுக்கு இறக்குமதி செய் தது வெட்கக்கேடான செயல் என்று ஏற்று மதியாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார் கள். தற்போது சில நாட்களுக்கு முன்பு ஏற்றுமதி யாளர் சங்க தலைவர், 40 சதம் ஏற்றுமதி குறைந்து விட்டது என்று அறிக்கை மூலம் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். 3 லட்சம் தொழிலாளர்களின் வேலையும் பறிபோனது.
பழைய நிலைமை தலைகீழாக மாறி, தற்போது திருப்பூரில் வேலையில்லை, வாரம் 3 நாள்தான் வேலை; வீட்டு வாடகை, மளிகை, கடன், குழந்தைகள் படிப்பு, வாங்கிய கடன் வட்டி போன்ற நெருக்கடியால் தொழிலாளர் கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். தினசரி தொழிலாளர்கள் வெளியேறு கிறார்கள்; கம்பெனி கட்டிடங்கள், வீடுகள் காலி யாகி உள்ளன. டீ கடை, துணிக்கடை உள்ளிட்ட வியாபாரம் வெறிச்சோடி காணப்படுகிறது. பரபரப்புக்கும், சுறுசுறுப்புக்கும் பெயர் பெற்ற திருப்பூர் களையிழந்து காணப்படுகிறது. வங்கிகளில் கடன் பெற்ற சிறிய முதலாளி கள் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளக் குமுறலை வெளிப்படுத்துகிறார்கள். மோடி அரசின் கொடூர தாக்குதலால் திருப்பூர் தொழில் நெருக்கடி உச்சத்தை எட்டிய நிலையில் உரிமை யாளர்கள் நிலைகுலைந்து செய்வதறியாமல் உள்ளனர். ஒன்றிய அரசின் தாக்குதலால் உருக்கு லைந்த திருப்பூர் மக்களை பாதுகாக்க தமிழக அரசு, உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு வீட்டு சொத்து வரி உயர்வும், மின்சார கட்ட ணத்தை அதிகப்படுத்தியதும் தொழில் முனை வோர், பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கண்ட உயர்வை திரும்பப் பெற வும் வேண்டும்.