tamilnadu

img

ஐந்தாவது ஊரடங்கு தளர்வுகள் விவசாயிகள், தொழிலாளர்களை வாழவைக்குமா? கொடுத்த ஆயிரத்தை “நைசாக” பறித்த அரசு

ஐந்தாவது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அது ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் சாலையோர வியாபாரிகள், பந்தல் அமைப்பாளர்கள், பூ கட்டும் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகளை வாழ  வைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

ஐந்தாவது ஊரடங்கு அறி விக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையில் கடந்த ஒருவார நிலை என்ன என்பதை படம்பிடித்துக்காட்டு கின்றனர் பல்வேறு தொழில்களில் ஈடு பட்டுள்ளவர்கள். மதுரை சம்மட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த செம்பாயி என்ற பூ வியாபாரி கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக பூ வியாபாரம் செய்து வருகிறேன் இது போன்ற ஒரு சூழ்நிலையை எப்போ துமே நாங்கள் சந்தித்ததில்லை. தற் போது கொரோனா நோய் பரவல் கார ணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவால் பூ கட்டும் தொழில் பெரும் நெருக்கடியை சந்தித் துள்ளது, கோவில்கள் திறக்காத நிலை யில் பூக்கள் விற்பனையாகவில்லை. திருமணத்திற்கு மாலை ரூ.3,500-க்கு வாங்கினர்.

இரண்டு தினங்களுக்கு முன் ஒரு திருமணத்திற்கு மாலை ரூ.2 ஆயிரத்திற்குத்தான் கொடுத் தோம். ஒரு நாளைக்கு 800 ரூபாய் வியாபா ரம் நடந்த இடத்தில் 300 ரூபாய்க்கு வியாபாரம் நடப்பதே கஷ்டமாக உள்ளது. அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் மின்சாரக் கட்டணம், கேபிள் டிவி கட்டணம் கொடுக்கத்தான் இந்த இரண்டு மாதங்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக சார்பில் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களை வைத்துத் தான் உணவு சமைத்து சாப்பிட்டு வருகிறோம். எங்களுடைய நிலையை கருத்தில் கொண்டு அரசு ஒரு குடும்பத்திற்கு ஐந்தாயிரம் ஆயி ரம் ரூபாய் வழங்க வேண்டும் என் றார்.  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செல்லும் வழியில் சாலையோரத்தில் கடை வைத்து சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களை விற் பனை செய்யும் தமிழரசி - கோபால் கூறியது: 15 ஆண்டுகளாக கடை நடத்தி வருகின்றோம்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்க ளாக கோவில்கள் அடைக்கப்பட்ட நிலையில் கடைகளும் அடைக்கப் பட்டன. ஒரு வரமாகத்தான் கடை வைத் துள்ளோம். தினசரி ஆயிரம் ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்ற இடத் தில் கடந்த ஒரு வரமாக ரூ.150 அல்லது ரூ. 200 க்குத்தான் வியாபாரம் நடைபெறுகிறது. ரேசன் கடையில் ஒரு மாதம் மட்டும் அரசு ரூ.1000 கொடு த்தது. நலவாரியம் மூலம் ஆயிரம் கொடுத்தனர். இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. வீட்டு வாடகை ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும். அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் எங்க ளது தேவையை எப்படி பூர்த்தி செய் யும். ரேஷன் அரிசி மோசமாக உள்ளது. இருப்பதை வைத்து சமாளித்து வரு கிறோம். ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் கொரோனா கால நிதியாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டு மென்றார்.

சிவா மார்க்கெட்டிங் உரிமையாளர் அகிலாண்டேஸ்வரி, சிவா ஆகியோர் கூறுகையில் நாங்கள் மூன்று கடை கள் நடத்தி வருகிறோம் ஒவ்வொரு கடையிலும் 12 பேர் பணியாற்று கிறார்கள் ஒவ்வொரு தொழிலாளிக் கும் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயி ரம் வரை சம்பளம் வழங்கப்படு கிறது. ஒவ்வொரு கடைக்கும் 40 ஆயி ரம் வாடகை கொடுக்கிறோம். கொரோனா ஊரடங்கிற்கு முன் தின சரி ரூ. 40 ஆயிரம் வரை வியாபாரம் நடைபெற்று வந்தது. தற்போது ஒரு வாரமாக கடை வைத்துள்ளோம். 5 ஆயிரம் ரூபாய்க்கு வியாபாரம் நடை பெறுவதே சிரமமாக உள்ளது. ஊழி யர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யா மல் வழங்கப்பட்டுவிட்டது. அதே நேரத்தில் பொருட்களை கடனாக கொடுத்தவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர்களி டம் பத்து தொழிலாளிகள் பணியாற்று வார்கள் அவர்களுக்கும் அவர்கள் ஊதியம் கொடுக்க வேண்டும்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள் ளது. வியாபாரிகளில் வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்துவதற்கு ஆறு மாதகாலம் அவகாசம் வழங்க வேண்டும். கடன் நிலுவைத் தொகை க்கு வங்கிகள் வட்டி வசூலிக்கக் கூடாது என்றனர். காளவாசல் பகுதியில் பழக்கடை வைத்துள்ள ஸ்டாலின் - இந்திரா கூறு கையில், கடந்த இரண்டு மாதங்க ளாக பழங்கள் விற்பனை செய்யமுடி யாமல் பெரும் நெருக்கடியை சங்ந தித்தோம். தெருக்களில் கூட பழங்கள் விற்பனை செய்ய முடியவில்லை. 22 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கியிருந்தோம். தற்போது கடந்த ஒரு வாரமாக கடைகள் வைத்து விற்பனை செய்வதற்கு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. தினசரி 500 ரூபாய்க்கு பழங்கள் விற்பதே சிர மமாக உள்ளது. இதில் தவணை யும் கட்ட வேண்டும். கிராமப் பகுதி யிலிருந்து இருசக்கர வாகனத்தில் வர 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட வேண்டியுள்ளது.

அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய், நிவாரணம் மளிகைப் பொருட்களையும் வைத்து எத்தனை நாளைக்கு நாங்கள் சமைத்துச் சாப்பிட முடியும். தமிழக அரசு மக்களின் பொரு ளாதாரத்தை மேம்படுத்த உரிய நிவா ரணம் வழங்கவேண்டுமென்றனர். மதிச்சியம் பகுதியில் உள்ள பந்தல் போடும் தொழிலாளி சுரேஷ் கூறுகை யில், மதுரை நகர் பகுதியில் செல்லூர், பந்தல்குடி, மதிச்சியம், ஆழ்வார்புரம் என நகரில் பல்வேறு பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளார்கள். என்னிடம் 15 தொழிலா ளர்கள் பணியாற்றுகிறார்கள் அவர் களுக்கு வேலை காலத்தில் 800 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக சாமியானா, பந்தல் போடும் தொழில் முடங்கிய தால் பெரும் நெருக்கடியில் உள் ளோம்.

தொடர்ந்து திருவிழாக் காலம் என்பதால் பந்தல் அமைக்கும் பணிக்கு கிராக்கி நிலவிவரும். சித்திரைத் திரு விழாவிற்கு குறைந்தபட்சம் நான் மட்டும் 10 இடங்களில் பந்தல் அமைத்து கொடுப்பேன். சித்திரை திரு விழாவும் நடக்கவில்லை. இதனால் பெரும் தொழில் இழப்பீட்டை சந்தித் துள்ளோம். தற்போது சுப நிகழ்ச்சி களும் இறப்பு நிகழ்ச்சிகளுக்கும் கூட பந்தல்கள் அமைக்கப்படுவதில்லை. எங்களைப் போன்ற தொழிலா ளர்களை பாதுகாக்க நலவாரியம் அமைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். அரசு எங்களைப் போன்ற தொழிலாளர் களை பாதுகாக்க குறைந்தபட்சம் மாதம் ரூபாய் 7 ஆயிரம் பேரிடர் நிதி யாக வழங்க வேண்டுமென்றார்.  -ஜெ.பொன்மாறன்