tamilnadu

img

ஆளுநர் மீது தமிழக அரசு ஏன் வழக்குப் பதிவு செய்யக்கூடாது?

கடலூர், ஜூன் 27 - நானும் குழந்தை திருமணம் தான் செய்து கொண்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த ஆளுநர் மீது தமிழ்நாடு அரசு ஏன் வழக்கு பதிவு செய்யக் கூடாது என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வினவினார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது: 1986ஆம் ஆண்டு குழந்தை திரு மண தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த சட்டத்தை மீறி ஒரு  சில இடங்களில் குழந்தை திருமணங் கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  குறிப்பாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஒவ்வொரு ஆண்டும் குழந்தை திருமணங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து பல்வேறு புகார்கள் வருகின்றன . அதேபோல இந்த ஆண்டும் குழந்தை  திருமணங்கள் பற்றி புகார் வந்த போது, தீட்சிதர்கள் மீது காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்த னர். ஆனால் இதை தமிழ்நாடு ஆளுநர் ஒரு ஆர்எஸ்எஸ் காரராக இருப்பதால் கடமையை செய்த காவல்துறையை கண்டிக்கிறார். 

மேலும் அந்தப் பெண்களுக்கு இரு விரல் பரிசோதனை செய்துள்ளார்கள் என்று உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.  மேலும் தானும் குழந்தை திருமணம் செய்தேன் என்று  ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார். ஒரு ஆளுநரே  தான் குழந்தை திருமணம் செய்துள் ளேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் போது தமிழக அரசு ஏன் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கூடாது? நடராஜர் ஆலயத்தை மீட்டிடுக! சிதம்பரம் நடராஜர் கோயிலை பொறுத்தவரை அன்றைக்கு இருந்த  ஜெயலலிதா அரசாங்கம் உச்சநீதி மன்றத்தில் சரியான வாதங்களை முன் வைக்காததால் அந்த கோயில் தீட்சிதர்கள் கையில் சென்று விட்டது. இதனால் சிதம்பரம் நடராஜர் ஆலயம் வழிபாட்டுக் கூடமாக இல்லாமல் வன்முறைக் கூடமாக மாறி உள்ளது. எனவே தற்போது உள்ள அரசு நடராஜர் கோயிலுக்கு என்று தனி சட்டம் இயற்றி அதை கையகப்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களின் சொத்துக்களை இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பினர் கூறி வருகின்றனர்.  ஏற்கனவே தனியாரிடம் இருந்தபோது முறைகேடுகள் நடைபெற்றதால் தான் இந்து அறநிலையத்துறை என்று உருவாக்கி அதன் கீழ் கோயில்கள் செயல்பட்டு வருகின்றன. 25 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளச் சாராயத்துக்கு எதிராக போராடிய வாலிபர் சங்கத் தோழர்கள் குமார், ஆனந்தன் ஆகியோர் கொலை செய்யப் பட்டனர். அவர்களது 25ம் ஆண்டு நினைவு தினம் திங்கட்கிழமை கடைப் பிடிக்கப்பட்டது. 

 சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனையும், போதை பொருள் விற்பனையும், தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஆட்சிகள் மாறி னாலும் இதை தடுக்க எந்த நட வடிக்கையும் எடுத்தது போல் தெரிய வில்லை. இதற்காக அரசை மட்டுமே குறை சொல்ல முடியாது. இப்போது இருக்கிற மக்கள் மத்தியில் போதைப்  பழக்கம்  புரையோடி இருக்கிறது.  மரக் காணத்தில் நடந்த  கள்ளச் சாராயம் மரணங்கள் தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. எனவே தமிழக அரசு கள்ளச்சாராய விற்பனையையும் போதைப் பொருள் விற்பனையையும் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வரவேற்பு 

தமிழக அரசு 500 மதுக்கடைகளை மூடி இருக்கிறது. அதை நாங்கள் வரவேற்கிறோம். வரும் காலங்களில் படிப்படியாக மேலும் மது கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அகில இந்திய அளவில் பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை உருவாகி இருக்கிறது. 2014  மற்றும் 2019ஆம் ஆண்டு தேர்தலில்  இது போன்ற ஒற்றுமை உருவாக வில்லை. வெறும் 35 சதவீத வாக்கு களை பெற்று பாஜக வெற்றி பெறு கிறது. 65 சதவீத ஓட்டுகள் பிளவு பட்டிருப்பதால் அவர்கள் வெற்றி அடைய முடிகிறது    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக பாஜகவை தோற்கடிக்கும் கூட்டணி அமையும் என்று நாங்கள் கருதுகிறோம்.  கடலூர் மாவட்டத்தில் வீசிய சூறைக்காற்றினால் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க அமைச்சரை சந்தித்து கூறி னோம். அவரும் நடவடிக்கை எடுப்ப தாக கூறியுள்ளார்.  எனவே தமிழக அரசு விவசாயி களுக்கு என்று ஒரு காப்பீட்டு திட்டத்தை உருவாக்கி, இது போன்ற இயற்கை சீற்றங்களில் பாதிக்கப் படும்போது உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், ஜே. ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.