tamilnadu

img

ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் வருடியவர்

சென்னை, பிப்.6- மறைந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்க ருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர்  பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். திராவிடர் கழத் தலைவர் கி. வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் இரா. முத்தரசன்,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி, ஆளுநர் தமிழசை சவுந்தரராஜன், பாடலாசிரியர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோ ரும் தங்களது புகழஞ்சலியை உரித்தாக்கி வருகி ன்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் : ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் வருடியவர் இசைக் குயில் லதா மங்கேஷ்கர். தனது தேனையொத்த குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் அவர் வருடிச் சென்றுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இசை ஆர்வலர் ்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்”. கி.வீரமணி: இந்தியாவின் நைட்டிங்கேல் என்று புகழ் பெற்ற லதா மங்கேஷ்கர் ஹிந்தி, மராத்தி யில் பாடத் துவங்கி புகழ் ஏணிக்குச் சென்றவர்.

தனக்கென வாழாது, தான் திரட்டிய செல்வத்தை மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் அறப்பணிகளிலும் ஈடுபட்ட மனிதநேயம் மிக்கவர். அவரது இழப்பு நாட்டிற்கும், இசை உலகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. இரா. முத்தரசன்: நாட்டுப்புற இசைக் குடும்ப த்தில் பிறந்த லதா மங்கேஷ்கர் பதிமூன்று வயதில் இசைப் பயணத்தை தொடங்கியவர். பல்வேறு மொழி பேசும் மக்களின் இதயங்களில் சிம்மா சனம் போட்டு அமர்ந்து கொண்ட இன்னிசை ராணி யாக திகழ்ந்தவர். செம்மொழியாம் தமிழ் உட்பட முப்பத்தாறு மொழிகளில் அவரது காந்த சக்தி வாய்ந்த குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வைகோ: இசை என்றாலே புகழ். அந்த இசைத்துறையில் புகழ்க்கொடி நாட்டி, நம்மை எல்லாம் கண்ணீரில் ஆழ்த்தி விடைபெற்றுள்ளார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர். இசைதான் அவரது மூச்சு. இசைக்கு எல்லைகள் இல்லை,

எந்தத் தடையும் இல்லை.இசைக்குயில் லதா மங்கேஷ்கர் புகழ், ஏழிசையாய், இசைப்பயனாய், என்றென்றும் நிலைத்து இருக்கும். கே.எஸ் அழகிரி: ஏறத்தாழ 30 ஆயிரம் பாடல்களை 20 இந்திய மொழிகளில் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர். மதம், மொழி, இனம் சாதி எல்லைகளைக் கடந்து லதா மங்கேஷ்கர் பாடலை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. மெல்லிசை அரசி என அழைக்கப்பட்ட  லதா மங்கேஷ் ்கர் பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருது களைப் பெற்று சாதனை படைத்தவர். என்.ரங்கசாமி: தொடர்ந்து 70 ஆண்டுக ளுக்கும் மேலாக இந்திய மக்களின் மனதை தனது இன்னிசைக் குரலால் ஆட்சி செய்தவர். வேறொருவரை இட்டு நிரப்ப முடியாத வெற்றி டத்தை அம்மையாரது இழப்பு ஏற்படுத்தி யிருக்கிறது.  

இது அம்மையாரது திறமைக்கும் உழைப்பிற்குமான சான்று ஆகும். தமிழசை சவுந்தரராஜன் : இந்தியாவின் “இசைக்குயில்” லதா மங்கேஷ்கர் தனது இனிய குரல் வளத்தால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இசை ரசிகர்களின் அனைவரின் நெஞ்சத்தி லும் நிறைந்திருந்தார். கவிஞர் வைரமுத்து: இந்தியாவின் இசைகுயில் பறந்துவிட்டது. இசை கிரீடத்தின் பாரத ரத்னா விழுந்துவிட்டது. அவர் பாடியது மேட்டுக்குடிக்கு மட்டுமல்ல, ரோட்டுக் குடிக்கும். உழைக்கும் மக்கள் அவர் பாடிய பாடலைக் கேட்டு தங்கள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டி ருக்கிறார்கள். அந்த மாபெரும் இசையரசியின் புகழ் வாழ்க. ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட  பலரும் புகழஞ்சலியை தெரிவித்திருக்கிறார்கள்