சென்னை, பிப். 14 – பணி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே ஒழுங்கு நடவடிக்கைகள் மீது தீர்வு காண வேண்டும் என்று ஊரக வளர்ச்சி துறை ஓய்வூதியர்கள் வலியுறுத்தினர். அரசு நிர்ணயித்த கால வரையறைக்குள் ஓய்வூதி யர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிலுவை மற்றும் துறை ரீதியான விசா ரணைகளை முடிக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்யும் முறையை கைவிட வேண்டும். அரசு முதன்மை செயலா ளர் மற்றும் ஊரக வளர்ச்சி ஆணையர் தலைமையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை யும், ஆட்சியர் தலைமையில் 2 மாதங்களுக்கு ஒரு முறையும் ஓய்வூதியர் குறை தீர்வு கூட்டத்தை நடத்த வேண்டும். ஒழுங்கு நடவ டிக்கை நிலுவை காரணமாக முறையாக ஓய்வு பெற அனுமதிக்காதவர்களுக்கு நீதிமன்ற தீர்ப்புகள், அரசாணைகளின் படி ஓய்வூதியப் பயன்களை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி செவ்வாயன்று (பிப்.14) சைதாப்பேட்டை யிலுள்ள ஊரக வளர்ச்சி இயக்ககம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூ தியர்கள் சங்கத்தின் மாநி லத் தலைவர் ச.இராம மூர்த்தி தலைமை தாங்கி னார். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி துவக்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பா.ரவி பேசினார். அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளன பொதுச் செயலாளர் நெ.இல.சீதரன், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் ச.டேனியல் ஜெயசிங், தமிழ்நாடு ஊரக மாநில வளர்ச்சிப் பணி அலுவலர் கள் சங்க மாநிலத் தலை வர் அ.கென்னடி பூபாலரா யன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ச.பாரி, சங்கத்தின் கவுரவத் தலைவர் மு.பரமேஸ்ரன், பொருளாளர் மு.மகா லிங்கம், துணைத்தலைவர் தீ.ச.வி.மூர்த்தி உள்ளிட் ்டோர் ஆதரவு தெரிவித்து பேசினர். இதனைத்தொடர்ந்து சங்கத்தின் நிர்வாகிகள், துறை உயர் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்து பேசினர்.