tamilnadu

img

கணினிமயமாக்கப்பட்ட வருவாய் பதிவேட்டு குழப்பங்கள் எப்போது தீரும்?

மன்னார்குடி:
இருபது  ஆண்டுகளுக்கு முன்பு கட்டு மனை வாங்கி, பட்டா பெற்று உட்பிரிவும் செய்யப்பட்டு விட்டது. வீடும்   அனுமதி முறையாக பெற்று  கட்டியாகிவிட்டது. திருமணம் முடிந்து குடும்ப சகிதம் கட்டிய அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது கால வளர்ச்சியில் நகரங்களுக்கு குடிபெயரும் தேவைகள் சில குடும்பங்களுக்கு ஏற்படுகின்றன.   நவீன வசதியோடு புதிய வீடு ஒன்றை நகரங்களில் வாங்க வேண்டிய தேவையும் கட்டிய வீட்டை விற்க வேண்டிய கட்டாயமும்ஏற்பட்டுள்ளது. தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே  வீட்டையும்வீட்டை ஒட்டிய காலி  மனைகளையும் தனது வாரிசுகளுக்கு பத்திரப் பதிவுஆவணங்களின் ’மூலம் பாகப்பிரி வினை செய்து கொடுக்க வேண்டிய நி்லை  உள்ளது இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபடும்போது   வருவாய்துறையின்  கணினி ஆவண பதி்வுகளில் அந்த வீடும் பட்டா மனைக்கட்டும்  அரசு புஞ்சை என்றும் அரசு நஞ்சை என்றும் இன்னும் சிலரது பெயரும் தவறாகஉள்ளது என்றால் என்ன செய்வது?  இதனால் உடனே சொத்து விற்பனை செய்வதில்  பத்திர பதிவு செய்வதில் தடங்கல்கள் ஏற்பட்டு அவைகள்ஒரு பிரச்சனையாகவே உருவாகி உள்ளது.

இந்த பிரச்சனை  திருவாரூர் மாவட்டத்தில் குறிப்பாக ஊராட்சி பகுதிகளில் புறநகர்களில்  பரவலாகஉள்ளது என்ற செய்தி கிடைக்கும்போதே மாநிலம் முழுவதும் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருவாய்துறையில் இருப்பதாகவும்  தகவல்கள் கூறுகின்றன. இதற்கு அடிப்படை காரணம்  வருவாய்துறைபதிவுகள் கணினிமயமாக்கப்படும் போது பொருத்தமான திருத்தங்களு டன் திருந்திய புதுநிலை பதிவுகள் செய்யப்படவில்லை என்றும் இதனால்தான் இந்த பிரச்சனைகள் எழுந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.  மன்னார்குடி.  நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மு. பத்மநாபன் நமது செய்தியாளருக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் அசேஷம் ஊராட்சியில் வாழ்ந்து வரும் சா. சம்பத் என்பவர்உள்ளிட்ட பலரது வீடுகளுக்கு 17ஆண்டுகளுக்கு முன்பு உட்பிரிவுசெய்யப்பட்டு  பட்டா வழங்கப்பட்டும் பின்னர் வீடுகள் கட்டப்பட்டுகுடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் இதனை பல்வேறு முறையீடுகள் செய்தும் சரி செய்யப்படவில்லை என்றும்  திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு முறையீடு செய்துள்ளதாகவும் அடுத்த கட்டமாக போராட்டம் குறித்து முடிவு செய்யவிருப்பதாகவும் மு. பத்மநாபன்  கூறியுள்ளார்.

தீர்வு
இதுபோன்ற தவறுகளை சரி செய்யும் அதிகாரம் வருவாய் கோட்டாட்சியர்களுக்கே உள்ளது. இதை சரி செய்ய தீர்மானிப்பதற்கு முன்பு கிராம கணக்குகளை தரவழைத்து ஒப்பிட்டு பார்க்கும் நிர்வாக தாமதங்கள் ஒருபுறம் இருந்தாலும் இத்திருத்தங்கள் முடிவில் திருந்திய பதிவுகளாக வருவாய்துறை இணையத்தில் ஏற்றப்படுவது சென்னையில் உள்ள வருவாய் மாநில நிர்வாக ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள கணினி செயலகத்தில்தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது களைப்படைய வைக்கும் நீண்ட கால தாமதமாகும். இது கட்டுமனை மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு பல்வேறு  கால விரயத்தையும் பதற்றத்தையும் .இழப்புகளையும் உருவாக்குகிறது. இப்பிரச்சனைகளை அவ்வப்போது முடித்து வைத்து சரி செய்ய திருந்திய புதுநிலை பதிவுகளை செய்வதற்கான வசதியும் வாய்ப்பும் அதிகாரமும் வருவாய் மாவட்ட நிர்வாகத்தில் இருக்க வேண்டும். மாவட்ட வருவாய் நிர்வாகத்தின் பணிகளில் ஒன்றாகவும் இது மாற வேண்டும். மாவட்டாட்சியர் அலுவலகத்திலேயே இத்திருத்தப்பதிவுகள்  செய்யப்படுவது மட்டும்தான் இதற்கான ஒரே தீர்வாக இருக்க முடியும். இதற்கான மாற்று தொழில்நட்ப மற்றும் நிர்வாக வழிமுறைகளை சாத்தி்யங்களை உருவாக்க  உரிய நடவடிக்கைகளை வருவாய் மாவட்ட நிர்வாகம்தான் மேற்கொள்ள வேண்டும். விரைவில் இப்பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். வருவாய் மாவட்ட நிர்வாகம் தாமதமின்றி நடவடிக்கை எடுக்குமா?           (ந.நி.)