- 1970 -இல் சிஐடியு ஆரம்பிக்கப்பட்ட பிறகு அமைப்புசாரா தொழிலாளர் களை ஒன்று திரட்டவும் கவனம் செலுத்தியது.
- 1970இல் கேரளாவில் சுமைப்பணித் தொழிலாளர்களை திரட்டி 1975இல் மாநில அளவில் வலிமைமிக்க போராட்டங்களை சிஐடியு நடத்தியது.
- 1980இல் இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் ஈ.கே.நாயனார் கேரள முதல் அமைச்சராக இருந்த போது சுமைப்பணித் தொழிலாளர்கள் நலன் காக்கும் சட்டங்கள் கொண்டு வரப் பட்டன. நலவாரியம் அமைக்கப் பட்டது.
அரசு குடோன்களில் பணி செய்ப வர்கள் மார்க்கெட் மற்றும் ரோட்டோரங்க ளில் பணி செய்யும் சுமைப்பணியா ளர்கள், கடைகளில் பணி செய்யும் சுமைப் பணியாளர்கள் என்று தனித்தனியாக சட்டம் இயற்றப்பட்டது மற்றும் கிராஜி விட்டி,மருத்துவ சலுகைகள் வழங்கப் பட்டன. மருத்துவ விடுப்பின் போதும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் அவர் வேலை செய்யும் இடத்தில் என்ன சம்பளம் வருகிறதோ அது அப்படியே அவருக்கு கிடைக்க ஆவன செய்திருக்கிறது. அது மட்டு மில்லாமல் கேரளாவில் பண்டிகை போனஸ், பணி ஓய்வில் வீட்டுக்கு சென்று ரூ.18 ஆயிரம், ரூ.20ஆயிரம் என்று அவர்க ளுக்கு சர்வீசுக்கு தகுந்தார்போல் கிராஜி விட்டி, ஓய்வூதியம்,வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க குறைந்த வட்டியில் கடன்,வீடு கட்டும் கடன், ஆகியவை வழங்கப்படுகிறது. இதனால் சுமைப் பணியாளர்கள் தற்போது நிம்மதியுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்ற னர். தமிழகத்தில் உடல் உழைப்பு தொழி லாளர்களுக்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க அரசாங்கம் மாறி,மாறி, வந்து நலவாரி யத்தில் சில மாற்றங்களை கொண்டு வரு கின்றனர். ஆனாலும் தமிழகத்தில் இருக்கும் 3 லட்சம் சுமைப்பணித் தொழி லாளர்களுக்கு தனி நலவாரியம் இது வரை அமைக்கப்படவில்லை. தமிழ்நாடு சுமைப்பணியாளர்கள் சம்மேளனம் (சிஐடியு) சார்பாக பலமுறை எடுத்துரைத்தும், கடந்த 15 ஆண்டுகளு க்கு மேலாக பல போராட்டங்களை நடத்தி யும், தனி நலவாரியம் ஏற்படுத்தப்பட வில்லை.
எனவே தமிழகம் முழுவதும் சுமைப் பணித் தொழிலாளர்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். எல்லாவற்றையும் போராட் டங்கள் தான் தீர்மானிக்கும்!
கட்டுரையாளர் : மாநிலத் தலைவர், தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர்கள் சம்மேளனம்