tamilnadu

உலகச் செய்திகள்

இஸ்ரேல் தன்னைப் பற்றி என்ன தகவல்களை வெளியிடுகிறதோ, அதை அடிப்படையாகக் கொண்டு பிரிட்டன் பள்ளிக்கூடங் களில் பாடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. பள்ளிக்கூட மாணவர் களுக்கு பாலஸ்தீனத்தின் தரப்புக் கருத்தை எடுத்துச் சொல்லாமல்,  சில இஸ்ரேல் அமைப்புகள் மூலமாக இஸ்ரேலின் கருத்துக்களை மட்டும் கொண்டு செல்கிறார்கள். ஒரு தரப்பு செய்தியை மட்டுமே கொண்டு செல்வது பிரச்சனையின் தன்மையைப் புரிந்துகொள்ள உதவாது என்று அரசியல் ஆய்வாளர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

தங்களைப் போரில் இழுத்து விடும் முயற்சி நடப்பதாக ரஷ்யா வின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார். மேற்குலக நாடுகள் திட்டமிட்டே அப்படியொரு நிலைமையை உருவாக்குகிறார்கள் என்றும், உக்ரைன் தொடர்பான ரஷ்யாவின் கவலைகளை அவர்கள் அலட்சியப்படுத்துகிறார்கள் என்றும் புடின் கூறியுள்ளார். கடந்த ஆறு வாரங்களாக அமைதி காத்து வந்த  விளாடிமிர் புடின் முதன்முறையாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மேற்கொண்டு வரும் பொய்ப் பிரச்சாரம் பற்றிக் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரான்சுக்கும், ஆப்பிரிக்க நாடான மாலிக்கும் இடையிலான உறவு மோசமாகியுள்ளது. தங்கள் நாட்டுக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதுவரை மாலியை விட்டு 72 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று காலக்கெடு விதித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு உகாண்டாவுடனான எல்லையை மாலி திறந்துள்ளது. மாலியில் நிறுத்தப்பட்டுள்ள தங்கள் படைகள் பற்றி இதுவரையில் முடிவெடுக்கவில்லை என்று பிரான்ஸ் கூறியுள்ளது.