‘ஒன்றிய அமைச்சர் பொறுப்பு ஏற்ற உடனேயே ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை கேரளத்தில் அமைப்பேன் என்று உறுதி அளித்ததோடு கேரளம் மற்றும் தமிழ்நாட்டுக்காகவும் உழைக்கப் போகிறேன்’ என்று நடிகர் சுரேஷ் கோபி கூறியுள்ள நிலையில், “6 ஆண்டு காலம் நியமன நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கேரளம் அல்லது நாட்டுக்குச் செய்த ஒரே ஒரு நல்ல காரியத்தைச் சொல்லிவிட்டு, இனிமேல் செய்யப் போவதை (சுரேஷ் கோபி) சொல்லட்டும்” என்று சிபிஎம் மத்தியக் கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஏ.கே. பத்மநாபன் குறிப்பிட்டுள்ளார்.