திருவில்லிபுத்தூர், ஏப்.30- விருதுநகர் மாவட்டத் தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டியுள்ள திரு வில்லிபுத்தூர், வத்திரா யிருப்பு சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாட்க ளாக இரவு நேரத்தில் தொடர் மழை பெய்து வரு கிறது. நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதில் திருவில்லிபுத்தூரில் 9.20 மி.மீ., வத்திராயிருப்பில் 66 மி.மீ., பிளவக்கல்அணை பகுதியில் 41.20 மி.மீட்டரும் மழை பொழிவு பதிவானது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள செண்பகதோப்பு மீன்வெட்டி பாறை அருவி, அய்யனார் கோயில் அருவி, சாஸ்தா கோயில் உட்பட 13 நீர் வீழ்ச்சி களில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் காட்டாறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிளவக்கல் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 41.20மி.மீ., மழை பொழிவு பதிவாகி அணைக்கு நீர்வரத்து 100 கன அடியாக உயர்ந்தது. இதனால் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து தற்போது நீர்மட்டம் 27.30 அடியாக உள்ளது. பிளவக்கல் கோவிலாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 42.6 மி.மீ மழைபொழிவு பதிவாகி அணையில் நீர்மட்டம் 12.14 அடியாக உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கண்மாய், குளங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.