tamilnadu

img

27 தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ரூ.47 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

27 தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு  ரூ.47 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறை, மே15-  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர்கள் மற்றும் அனைத்து இணைத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக்கூட்டத்தில் 27 தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ரூ.47 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர்.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் முகம்மது ஷபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் 25 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.17 இலட்சம் மதிப்பிலான பால் பரிசோதனை கருவிகளும், 2 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.1 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான கணினியையும், 4 பயனாளிகளுக்கு ரூ.29 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான கறவை மாடுகளுடன் கால்நடை பராமரிப்பு கடனும் என மொத்தம் ரூ.47 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  பால்வளத்துறை அமைச்சர் வழங்கினார். இக்கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமல்ராஜ், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், அதிகாரிகள், கூட்டுறவு சங்க செயலாளர்கள், உறுப்பினர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.