tamilnadu

img

தில்லி பேரணியில் பெருந்திரளாக பங்கேற்போம்!

சென்னை, பிப். 1 - ஒன்றிய அரசின் மோசமான பொருளாதார கொள்கைக்கு எதிராக தில்லியில் நடைபெறும் பேரணியில் பெருந்திரளாக பங்கேற்போம்  என்று சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தர ராசன் அழைப்பு விடுத்தார். ஒன்றிய பாஜக அரசின்  நவீன தாராளமய கொள்கையை  கண்டித்தும், 14 அம்ச கோரிக்கைகளை  வலி யுறுத்தியும் ஏப்.5 அன்று தில்லி யில் 10 லட்சம் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. இதனையொட்டி செவ்வாயன்று (ஜன.31) சென்னையில் மண்டல கருத்தரங்கம் நடைபெற்றது. சிஐடியு, தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் ஆகிய   அமைப்புகளின் வட மாவட்டங் கள் சார்பில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது.

படையெடுப்பு

இந்த கருத்தரங்கில் அ.சவுந்தரராசன் பேசியதன் சுருக்கம் வருமாறு: மக்களின் உழைப்பை சுரண்டி கார்ப்பரேட்டுகள் கொழிக்க வேண்டும் என்பதுதான் நவீன தாராளமயக் கொள்கை. நாட்டின் செல்வம், உழைப்பின் உபரி முதலாளிகளுக்கு சென்று கொண்டிருக்கிறது. உடனடியாக கைது செய்ய வேண்டிய கொடிய குற்றத்தில் அதானி ஈடுபட்டுள்ளார். அவ ருக்கு உதவியாக இருந்த அமைச் சர்கள், அதிகாரிகள் அத்தனை பேருமே குற்றவாளிகள். ஆனால் அவர்கள்தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். பங்குச் சந்தை சூதாட்டம்  உலகம் முழுக்க பங்கு சந்தை  சூதாட்டம் நடக்கிறது. குதிரை  பந்தயம் மாதிரியான பொருளா தார முறை கடைபிடிக்கப்படுகி றது. முதலாளிகள் ஒருவருக் கொருவரை மட்டுமின்றி, உலக  மக்களையும் அழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நெருக்கடியை சரி செய்ய  மக்களின் உழைப்பை சுரண்டு கிறார்கள். வேலை நேரத்தை  அதிகரித்து, கூலியை குறைப் பது, நிரந்தரமற்ற பணியில் வைத்து நினைத்தபோது துரத்துவது போன்ற முத லாளிகளின் நிபந்தனைகள் வேகமாக இந்தியாவில் அமல்படுத்தப்படுகிறது. தொழிற் சாலைகளில் 1:10 என்ற முறையில் நிரந்தர ஒப்பந்த தொழி லாளர் முறை அமலாக்கப்படு கிறது.

குறைந்தபட்ச கூலியை உயர்த்து

இதற்கு மாற்றாக, பணி நிரந்தரம், குறைந்தபட்ச கூலி 26 ஆயிரம் ரூபாய் வழங்க கோருகிறோம். குறைந்தபட்ச கூலியை அதிகரித்தால்தான் பொருளாதாரத்தை நிலை நிறுத்த முடியும். பொருளாதார அறிஞர்களின் எச்சரிக்கையை தொடர்ந்து, ஜப்பான், ஜெர்மன்  போன்ற நாடுகளில் குறைந்தபட்ச கூலியை அதிகரித்துள்ளனர். அதை ஒன்றிய அரசு செய்ய மறுக்கிறது. 8-10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் மருத்து வமனைகளில் ஊழியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். ஆஷா திட்ட பணியாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் ஊதியம் தரப்படுகிறது. இதைவைத்து எப்படி உயிர் வாழ்வது?

போராட்டத்தால் சட்டம் நிறுத்தம் 

கிராமங்களில் விவசாயம் சாராத தொழிலாளர்கள் அதிகரித்து வருகின்றனர். நகர்ப்புறம் விரிவடைகிறது என்றால் கிராமப்புறம் சுருங்குகிறது என்று பொருள். கிராமத்தில் வேலையின்மையை உருவாக்கி, அத்துக்கூலிக்கு ஆட்களை தயார் செய்து வருகின்றனர். அந்த விளை நிலங்களை கார்ப்பரேட்களுக்கு எடுத்து கொடுக்க 3 வகையான வேளாண் சட்டங்கள் கொண்டு வந்தனர். அதனை எதிர்த்து ஒன்றுபட்ட போராட்டத்தின் வாயி லாக தற்காலிகமாக தடுத்து நிறுத்தியுள்ளோம்.

இணைந்துபோராடுவோம் 

விவசாயிகள், தொழிலாளி கள் என்ற இரு வர்க்கமும்  ஒன்றுசேர்ந்து போராடும் போதுதான் வெற்றி கிடைக்கும். இதனையொட்டியே ஏப்.5 தில்லி பேரணி நடைபெறுகிறது. இந்த போராட்டத்தை சீர்குலைக்க ஆட்சியாளர்கள் முயற்சிக்கிறார்கள். தொழி லாளர்களோடு மக்களும் இணைந்து போராடினால் பொதுத்துறை விற்பனையை முழுமையாக தடுக்க முடியும். நாட்டை பாதுகாக்க முடியும். பொய் சொல்வதற்கும் சாப்பி டுவதற்கும் மட்டும்தான் பிரதமர் மோடி வாயை திறக்கிறார். நிலம்,  வாழ்வுரிமைக்காக சுமார் 10 லட்சம் பேர் திரண்டு புதிய பிரள யத்தை உருவாக்க உள்ளோம். புதிய அத்தியாயத்தை படைக்க போகிறோம். தில்லி பேரணி ஆட்சியாளர்களுக்கு எதிரான படையெடுப்பாக உருமாறும். இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.2 லட்சம் கோடி

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பெ.சண்முகம் பேசுகையில், “மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு கற்பனைக்கு எட்டாத அளவிற்கு சென்றுள் ளது. 23 கோடி மக்கள் வறுமையில்  வாடும் நாட்டில், பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 102லிருந்து ஒரே ஆண்டில் 166ஆக உயர்ந்துள்ளது. முதல் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 27.52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மக்களை சுரண்டி, பொதுத்துறைகளை ஏமாற்றி சொத்துக்களை சேர்த் துள்ளனர். அதற்கு உதாரண மாக அதானியின் மோசடிதனங் கள் அம்பலமாகிக் கொண்டு இருக்கின்றன. முதலாளிகளுக்கு சாதகமான கொள்கையை கடைபிடிக்கும் மோடி என்கிற மோசடி அரசுக்கு முடிவுகட்ட வேண்டும்” என்றார். “இந்திய தொழிலாளி வர்க் கம் போராடி பெற்ற உரிமைகளை ஆட்சியாளர்களும், முதலா ளிகளும் பறித்து வருகின்றனர். இதனால் அதிகரித்து வரும்  வேலையின்மையை தவிர்க்க  பொதுமுதலீட்டை அதிகரிக் கவும், வேலைவாய்ப்பை உருவாக்கும் வளர்ச்சி திட்டங் களை செயல்படுத்தவும் வேண்டும்”என்றும் அவர் குறிப்பிட்டார். “கிராமப்புற பொருளா தாரத்தை பாதுகாக்கும் நூறுநாள் வேலை திட்டத்தில், ஆண்டுக்கு 42 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ஒழிக்கும் வகையில், ஒன்றிய அரசு நிதியை குறைத்து வருகிறது. இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த ஒன்றிய அரசு 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி அவர், “விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும். அனைத்து வகை இலவச, மானிய மின்சாரத்தை ரத்து செய்யும், மின்சார திருத்த மசோதாவை கைவிட வேண்டும். ஒன்றிய ஆட்சியாளர்களின் கொள்கைக்கு எதிராக மாபெரும் கிளர்ச்சியை உருவாக்குவோம்” என்றார்.

பிப்.21-28 பிரச்சாரம்

விதொச பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் குறிப்பிடு கையில், “ஒன்றிய ஆட்சியாளர்க ளின் மக்கள் விரோத கொள்கை களை அம்பலப்படுத்தும் வகையில் கிராமங்கள், தெருக்கள் தோறும் பிப்.21-28 வரை பிரச்சாரம் நடைபெறும். ஏப்.5ந் தேதி தில்லி பேரணியில் தமிழகத்திலிருந்து 10 ஆயிரம் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பங்கேற்போம்” என்றார். சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திரு வேட்டை தலைமையில் நடை பெற்ற இந்த கருத்தரங்கில் சிஐடியு உதவி பொதுச் செயலா ளர் வி.குமார், மாவட்டச் செயலா ளர்கள் பா.பாலகிருஷ்ணன் (தென்சென்னை), சு.லெனின் சுந்தர் (வடசென்னை), விவசாயி கள் சங்க துணைத்தலைவர் அ.துளசிநாராயணன், விவசாய தொழிலாளர் சங்க துணைத் தலைவர் அ.து.கோதாண்டம் உள்ளிட்டோர் பேசினர்.