tamilnadu

img

பாஜக-அதிமுக துரோக அணியை வீழ்த்துவோம்! சைதாப்பேட்டையில் எஸ்.கண்ணன்

பாஜக-அதிமுக துரோக அணியை வீழ்த்துவோம்! சைதாப்பேட்டையில் எஸ்.கண்ணன்

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரி ழந்தவர்களுக்கு டாடா நிறுவனம் 1.25 கோடி ரூபாய் நிவாரணம் தருகிறது. பஹல்காம் விவகாரத்தையடுத்து பாகிஸ் தான் திருப்பி தாக்கியதில், உரி பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு ஒன்றிய அரசு 1.30 லட்சம் ரூபாய் மட்டுமே நிவாரணம் வழங்கி உள்ளது. இதுதான் ஆட்சியாளர்களின் லட்சணம். உள்துறை அமைச்சர் அமித் ஷா குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீர் விலை 800 ரூபாய். ஆனால் சைதாப்பேட்டையில் பிளா ஸ்டிக் குடங்களில் தண்ணீர் பிடிக்க மக்கள் லாரிகளின் பின்னால் அல்லாடுகின்றனர். ஜப்பானை பின்னுக்குத் தள்ளி பொருளா தாரத்தில் இந்தியா 4வது இடத்திற்கு வந்து விட்டதாக வாய்ச் சவடால் அடிக்கின்றனர். ஜப்பானின் மக்கள் தொகை 12.50 கோடி. தனி நபர் வருமானம் 40 லட்சம் ரூபாய். இந்தியா வின் மக்கள் தொகை 140 கோடி. தனிநபர் வருமானம் 1 லட்சம் ரூபாய். இது பெருமையா? தமிழ்நாட்டில் வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடரிடன் போது மாநில அரசு கோரிய நிவாரண நிதியை ஒன்றிய அரசு தர வில்லை. மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய 34 ஆயிரம் கோடி ரூபாயை நிலு வையில் வைத்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் வந்த வார்தா புயல் நிவாரணத்தைக் கூட ஒன்றிய பாஜக அரசு வழங்காமல் உள் ளது. இந்த நிலையில் தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜகவுடன் அதிமுக தேர்தல் உடன்பாடு வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்துள்ள துரோகம். எனவே, தமிழக மக்கள் பாஜக-அதிமுக அணியை நிராகரிக்க வேண்டும். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் பேசியதிலிருந்து...