இருப தாம் நூற்றாண்டின் தொடக்க காலத் தில், உலகம் பெரும் மாற்றங் களைச் சந்தித்து கொண்டிருந்த வேளையில், ரஷ்யா, ஈரான், அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் மலர்ந்த ஒரு அபூர்வ காதல் கதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறது “அலி யும் நினோவும்” என்ற இந்த நாவல். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அஜர்பைஜானி இளைஞனுக்கும், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஜார்ஜிய இளவரசிக்கும் இடையே மலர்ந்த இக்காதல், வெறும் இரு உள்ளங் களின் இணைவு மட்டுமல்ல; இரு வேறு பட்ட கலாச்சாரங்களின், பண்பாடு களின், நம்பிக்கைகளின் சந்திப்பு கூட. 1920 முதல் 1944 வரையிலான காலகட்டத்தில் நடைபெறும் இக்கதை, அக்காலத்தின் சமூக, அர சியல் மற்றும் வரலாற்று மாற்றங்களை மிக நுட்பமாக விவரிக்கிறது.
முதல் உலகப் போரின் பின்னணி யில், சோவியத் யூனியனின் ஆதிக்கத் தின் கீழ் இருந்த அஜர்பைஜான் நாட்டின் துடிப்பான வரலாற்றையும், அதன் மக்களின் வாழ்வியலையும் இக்காதல் கதையுடன் பின்னிப் பிணைத்திருப்பது இந்நாவலின் தனிச்சிறப்பு. மூல நூலாசிரியர் யார் என்பது இன்றளவும் ஒரு மர்மமாக இருந்தாலும், அவரது படைப்பாற்றல் உலகெங்கும் பாராட்டப்பட்டு, முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, நூறுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டுள்ளது ஜெர்மன் மொழியில் குருபான் சையத் மொழிபெயர்த்த இந்நூலை, தமிழ் வாசகர்களுக்காக “பயணி தரன்” என்ற புனைபெயரில் ஸ்ரீதரன் மதுசூதனன் மொழிபெயர்த்துள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாக பல்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவமும், நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர் மோ யான் உள்ளிட்ட பலரின் படைப்புகளை மொழிபெயர்த்த திறனும் கொண்ட இவரது மொழிபெயர்ப்பு, நூலின் உணர்வுகளை அப்படியே தமிழில் கொண்டு வந்துள்ளது. காலச்சுவடு பதிப்பகம் வெளி யிட்டுள்ள இந்நூல், வெறும் காதல் கதை மட்டுமல்ல; அடையாளம், பண்பாடு, மதம் என பல அடுக்குகளில் பயணிக்கும் ஒரு வரலாற்று ஆவணம். காதலின் எல்லையற்ற தன்மையையும், மனித உறவுகளின் ஆழத்தையும் உணர்த்தும் இந்நூல், காலத்தால் அழியாத ஒரு இலக்கியச் செல்வமாக திகழ்கிறது.
அலியும் நினோவும்
தமிழில் : பயணி தரன்
விலை : ரூ.370/-
வெளியீடு : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
நாகர்கோவில்