tamilnadu

img

செங்கொடியை வாரியணைத்து முத்தமிட்டு...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மீது ஏழை,எளிய மக்கள் கொண்டு ள்ள அளவற்ற நம்பிக்கையை இன்னும்.... இன்னும்.... வலிமைப்படுத்தியிருக்கிறது அண்மையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த நடைபயணம். போராடிப்பெற்ற உரிமைகள் பறிக்கப்படு வதை மீட்டெடுக்க என்ற முழக்கத்தோடு மக்க ளின் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 250 கி.மீ தொலைவு நடைபயணமாக செல்வதென முடிவு செய்து 258 கி.மீ தூரம் தொய்வின்றி நடந்து முடிந்த நடைபயணம் கிராமங்களில் வாழும் மக்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.  டிச-17 அன்று மாவட்டத்தின் வடக்கு எல்லை யான கொள்ளிடம் ஒன்றியம், ஆச்சாள்புரத்தில் இந்த நடைபயணம் துவங்கியது. கம்யூனிச இயக்கத் தலைவர்களின் படங்கள் கொண்ட பதாகைகளையும்,செங்கொடிகளையும் ஏந்திய வாறு, செந்தொண்டர்களின் மிடுக்கான நடை யுடன், கோரிக்கைகளை முழங்கியது. இதற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். 

கட்சியின் நடைபயணத்தில் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், முன்னணி ஊழியர்கள் கலந்து கொண்ட இந்தப் பயணம் கொள்ளிடம், சீர்காழி,மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில்,தரங்கம்பாடி ஆகிய 6 ஒன்றியங்களில் பல நூறு கிராமங்கள் வழியாக வந்து டிச-23 அன்று தரங்கம்பாடி ஒன்றி யம் இலுப்பூர் சங்கரன்பந்தல் கடைவீதியில் நிறைவடைந்தது. செல்லும் வழிகளெல்லாம் பட்டாசுகள் வெடித்து, பறையிசைத்து, கிளாரிநெட் வாசித்து, உருமி இசைத்து வரவேற்றனர். பயணக்குழு வில் இடம்பெற்ற தோழர்களுக்கு கிராமத்துப் பெண்கள் ஆரத்தி எடுத்து, ரூபாய் நோட்டுக் களால் ஆன மாலைகளையும், பூமாலைகளை யும், கதர் ஆடைகளையும் அணிவித்து அன்பைப் பொழிந்தனர். இஸ்லாமிய ஜமாத்தார்கள், கிறிஸ்தவ மக்கள் என அனைத்துத்தரப்பு மக்க ளும் வீதிக்கு வந்து தங்கள் நம்பிக்கைக்குரிய கட்சி யின் தலைவர்களை வரவேற்று மகிழ்ந்தனர். திருமுல்லைவாசல்,வைத்தீஸ்வரன்கோவில்,மாப்படுகை,பெரம்பூர்,செம்பனார்கோவில்,திருக்கடையூர், இலுப்பூர் சங்கரன்பந்தல் ஆகிய 7 இடங்களில் நடைபயணத்தை விளக்கு கின்ற பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ், மாநிலக்குழு உறுப்பினரும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான வி.மாரிமுத்து, மாநி லக்குழு உறுப்பினர் பி.சுகந்தி,வாலிபர் சங்க மாநி லச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் உள்ளிட் டோர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை யாற்றினர்.

கோரிக்கைகள்

*மயிலாடுதுறை நகரத்தை சின்னாபின்ன மாக்கிய  பாதாளச் சாக்கடை திட்டத்திற்கு பதிலாக வேறுதிட்டத்தை அறிவித்து ஊழலின்றி செய்ய வேண்டும். மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும். *நான்கு வழிச்சாலையால் வீடுகளையும், நிலங்களையும் இழந்தவர்களுக்கும் குத்தகை விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டை உடனடி யாக வழங்கிடு,  *மயிலாடுதுறை பாதாள சாக்கடை கழிவு நீரை சத்தியவாணன் பாசன ஆற்றில்விடப்படு வதை தடுத்து  சுற்றுச்சூழல், சுகாதார சீர்கேடடைந்ததை தடுத்து நிறுத்து,

                                                                     *மாப்படுகை - நீடூர் ரயில்வே வழித் தடத்தில்  மேம்பாலம் அமைத்திடு, * குத்தாலம்  அரசு கல்லூரியை போதிய கட்டிட வசதிகளுடன் செயல்படுவதை உறுதிப்படுத்து, *மரவள்ளி கிழங்கை பயன்படுத்தி செம்பனார் கோயில் பகுதியில் ஜவ்வரிசி ஆலையை துவக்கிடு,  *மீனவர்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதை தடுத்து நிறுத்தி பாதுகாத்திடு,  * கடலோரப் பகுதிகளில் தேவையான தடுப்பணை களை அமைத்து கடல்நீர் உட்புகுவதை தடுத்திடு.  *மாவட்டத்தில் கிடைக்கும் வைக்கோலை ஆதாரமாக கொண்டு பேப்பர், அட்டை தயாரிக்க வும், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்கிடு மற்றும் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பெற்ற நடைபயணத்தில் தள்ளாத வயதிலும் 2 தோழர்கள் கம்பீரத்துடன் இடைவிடாது 7 நாட்க ளும் நடந்தே வந்து சக தோழர்களை உற்சாகப்ப டுத்தினர். அதே போன்று செந்தொண்டராக 20 வயது ஆனந்தி என்ற இளம் தோழரும், 17 வயதான  அஜய் என்ற இளைய தோழரும் ஒரு வார காலம் சலிப்பின்றி சக தோழர்களின் சோர்வை துடைத்தெறிந்து நடந்து வந்தனர். 

சிலிர்க்க வைத்த நிகழ்வுகள்

இதில் கொள்ளிடம் பகுதியிலிருந்து நடை பயணத்தில்  வந்த தோழர் குகன் (வயது 80), மயி லாடுதுறை ஒன்றியம், கிழாய் பகுதியை சேர்ந்த  தோழர் தங்கவேல்(79) இருவரும் குறிப்பிடத் தகுந்தவர்கள். தங்களது வயது முதிர்ச்சியிலும் மழை, கடுங்குளிர் என கொஞ்சமும் பொருட்படு த்தாமல் சக தோழர்கள் தர முன் வந்த எந்த ஒரு உதவியையும் ஏற்காமல் அன்போடு மறுத்து மக்கள் கோரிக்கைகளை முழங்கி தலைவர் களின் படங்களை தாங்கிய பதாகைகளையும், செங்கொடியையும் ஏந்தியவாறு வந்தனர்.

பயணத்திலே இறந்தா சந்தோசம்

திருக்கடையூர் வந்தடைந்து இரவு ஓய்வின் போது  தோழர் குகனிடம் பேசினோம். நடந்து வந்ததில் கால்கள் வீக்கமடைந்து, பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு இருக்கிறது, வலிக்கவில்லையா தோழர் ?என கேட்டதற்கு வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டே, எப்படி தோழர் வலிக்கும்.... கையில வெச்சிருக்கிறது செங்கொடி தோழர். மக்களுக்காக தானே நடக்குறோம் ... என கூறி விட்டு சிரித்தார். மறுநாள் தரங்கம்பாடி வந்த நடை பயணத்தில் தோழர் தங்கவேலின் அருகில் சென்று பேச தொடங்கினோம்.... ரெண்டு பசங்க இருக்காங்க எனக்கு. ரெண்டு  பேருமே நம்ம கட்சிதான் தோழர். நடைபயணத்திலேயே இறந்து போய்ட்டா சந்தோஷமா இருக்கும் என்று உணர்ச்சி பொங்கக் கூறியவர்... இப்படியே  நடந்து வர்ரத போட்டோ  எடுத்து பிரேம் பண்ணி வூட்ல மாட்டி வெச்சிக்கணும்னு ஆசை தோழர் என்றது நம்மைச் சிலிர்க்க வைத்தது. அதே போன்று 2 ஆவது நாள் பொதுக் கூட்டம் தொடங்குவதற்கு முன் அங்கே வந்தார்  மெலிந்த வயதான, பிச்சை எடுத்து உயிர் வாழும் முதியவர் ஒருவர். அழுக்கு ஆடையுடன் புன்சிரிப் போடு வந்தவர் தனது துணி மூட்டையிலிருந்த 100 ரூபாய் பணத்தை எடுத்து நடைபயணக்குழு தலை வரும், கட்சியின் மாவட்டச் செயலாளருமான பி.சீனிவாசனிடம் வழங்கி கைகுலுக்கினார். அவரின் நிலையை பார்த்து பணத்தை வாங்க அன்போடு மறுத்தபோதும், பிடிவாதமாக கண்கள் கலங்கியவாறு பணத்தை வாங்க மறுத்துச் சென்றது நடைபயணத் தோழர்களையும், பொதுக்கூட்டத்திற்கு வந்தவர்களையும் மனம் நெகிழ வைத்தது. சிறிது நேரம் அந்த பகுதியே அமைதியான சூழலில் இருந்தது. 

கட்டியணைத்து முத்தமிட்டு...

பல கிராமங்களில் மூதாட்டிகள் தோழர் களை கட்டியணைத்து முத்தமிட்டு வரவேற்றனர்.குத்தாலம் ஒன்றியம் ஏ.கிளியனூரில் சின்னஞ் சிறு குழந்தைகள் நடைபயணத்தை திருவிழா போல கொண்டாடினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி பண்ணை யடிமைத்தனத்தை உடைத்தெறிந்த காஞ்சிவாய், ஸ்ரீகண்டபுரம், கோனேரிராஜபுரம் பகுதிகளுக்கு சென்ற போது செங்கொடியை வாரி அணைத்து முத்தமிட்டு அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  கூலிப்பிரச்சனை தீர, தீண்டாமைக் கொடுமை ஒழிய, அடிப்படை உரிமைகளைப் பெற்றுதர  கடும் போராட்டங்களை நடத்தி, காவல்துறையின் தாக்குதலை எதிர்கொண்டு, பொய்வழக்குகளைச் சந்தித்து ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட  மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க அன்றாடம் களத்தில் போராடிக்கொண்டே இருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கட்சி யின் நடைபயணத்தை ஒவ்வொரு கிராமத்திலும் அன்போடு வரவேற்று உணவளித்து,தேநீர், சிற்றூண்டி வழங்கி இரவு ஓய்வெடுக்க இட மளித்து, நடைபயணத்திற்கான செலவுக்கு நிதியளித்து கோரிக்கைகள் வெற்றிபெற வாழ்த்தி வழியனுப்பிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் பெரும் நெகிழ்ச்சியுடனே 7 நாட்களும்  நடைபெற்றது. கட்சி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்தி வலிமையாக்கி இருக்கிறது இந்த நடைபயணம் என்று பி.சீனிவாசன் கூறினார். மேலும் அவர் கூறும் போது, இந்த பயணம் எங்களை சோர்வடைய வைக்கவில்லை. மாறாக புது தெம்பை ஊட்டியிருக்கிறது. எண்ணற்ற தோழர் களின் தியாகத்திலும்,ஓய்வில்லா மக்கள் பணி யாலும் கிடைத்த உரிமைகளால் நம்பிக்கையுடன் வாழ்கின்ற மக்கள் மனதார வாழ்த்தி வழி யனுப்பிவைத்துள்ளனர். போராட்டங்களை ஒவ்வொரு நாளும் எளியவர்களுக்காகவே தொடருவோம் என்று கூறி முடித்தார்.

- ஜான்சன்