tamilnadu

img

நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள குளங்களில் கழிவு நீர்

நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள குளங்களில் கழிவு நீர்

விவசாயிகள் வேதனை

கோவை, ஜூன் 8- நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள  குளங்களில் கழிவுநீர் தேக்கி இருப்பதால், நிலத்தடி நீர் மாசுபட்டு  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள் ளதாக விவசாயிகள் வேதனை யுடன் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பாயும் நொய்யல் ஆற்றுப்படுகையை ஒட் டியுள்ள ஒன்பதுக்கும் மேற்பட்ட குளங்களும், சூலூர் பகுதியில் மட் டும் மூன்று குளங்களும், இருபதுக் கும் மேற்பட்ட குட்டைகளும் ரசாய னக் கழிவுகள், தொழிற்சாலைக் கழி வுகள் மற்றும் குப்பைகளால் பெரும் மாசுபட்டுள்ளதால், அப்ப குதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் வேதனை அடைந்துள்ள னர். நொய்யல் ஆற்று நீர், நீர்வழிப்  பாதைகள் வழியாக குளங்களுக்கு செல்லும்போது, அதிகளவில் கழிவு நீர் வருவதால் குளங்களில் கழிவுநீர் மட்டுமே தேங்கியுள்ளது. இந்த குளங்களில் மீன் வளர்ப்பு  நடைபெறுவதாலும், மழைக்கா லங்களில் வெளியேற்றப்பட வேண் டிய கழிவுநீர் தேக்கி வைக்கப்படுவ தாலும் சுற்றுவட்டாரப் பகுதியில்  நிலத்தடி நீர் சீர்கெட்டு பயன்படுத் தப்பட முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. இதனால் அருகிலுள்ள விவ சாய நிலங்கள் பெருமளவில் பாதிக் கப்பட்டுள்ளன. கிணற்று நீர், போர் வெல் தண்ணீரை விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு நச்சுத் தன்மை வாய்ந்தவையாக மாறி விட்டன. மேலும், இந்த மாசடைந்த நீரி னால் விவசாயிகள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பயன் படுத்தினால் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக் கள் அச்சம் தெரிவிக்கின்றனர். நொய்யல் ஆறு பல நூற்றாண்டுக ளாக கொங்கு மண்டலத்தின் முக் கிய நீர் ஆதாரமாக விளங்கி வரு கிறது. சோழர்கள் காலத்தில் நொய் யல் ஆற்றின் நீர் மேலாண்மை சிறப் பாக அமைக்கப்பட்டிருந்தது. 32  அணைக்கட்டுகளும், 40க்கும் மேற் பட்ட குளங்களும் நொய்யலை ஆதாரமாகக் கொண்டு கட்டமைக் கப்பட்டன. ஆனால், தற்போது குளங்களின் எண்ணிக்கை 19 ஆக  குறைந்துவிட்டதோடு, ஆக்கிர மிப்பு மற்றும் மாசுபாட்டால் நொய் யல் ஆறு சீர்கெட்டுள்ளது. தொழிற்சாலைக் கழிவுகள், சாயப்பட்டறை கழிவுகள், சாக் கடை நீர், மருத்துவக் கழிவுகள் கூட  நொய்யல் ஆற்றில் கலப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண் ணம் உள்ளன. இதனால் நிலத்தடி  நீரும் மாசுபட்டு, குடிநீருக்கும், விவ சாயத்திற்கும் பயன்படுத்த முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. இப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு  காணப்பட வேண்டும் என்றும், சூலூரில் உள்ள குளங்களை தூர் வார அரசிடம் நிதி இல்லை என் றால், விவசாயிகள் அந்த குளங் களை தூர்வார தயாராக இருப்ப தாக விவசாயிகள் தெரிவித்துள்ள னர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யங்கள் அமைப்பதும், மாசுக்கட் டுப்பாட்டு வாரியம் கடுமையான நட வடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். நொய்யல் ஆற்றையும், அதைச் சார்ந்த நீர் நிலைகளையும் பாதுகாக்க தமிழக  அரசு உரிய நடவடிக்கை எடுக்கப் படாவிட்டால், கொங்கு மண்டலத் தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு  விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள் ளது.